பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 திறைப் பொருள்களை அரசர் இரவலர்க்குக் கொடுத்து விடும் வழக்கம் பண்டைக்காலத்தில் உண்டென்பது இவர் பாடலாலும் தெரிய வருகின்றது. சேரமான் செல்வக் கடுங் கோவாழியாதனுடைய வண்மையைப் பாராட்டி இவர் பாடியிருக்கும் புறநானூற்றுச் செய்யுள் (387) மிகவும் பாராட்டற்பாலது. இவர் பாடிய ப ா ட ல் கள். 2. நற்-1, புறநானூறு-1. 12. குறுங்கோழியூர் கிழார். இ வ. ர் வேளாளர். இவராற் பாடப் பட்டவன் சேரன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையாவன்; போரிற் பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணிப்புண்டு அப்பால் அப்பிணிப்பைத் தானே நீக்கிக் கொண்டு சென்று அவன் சிங்காசனத்திலேறிய வரலாறும், அச்சேரனுடைய வீரமும், செங்கோன் முறைமையும் இவரால் நன்கு கூறப்பெற்றுள்ளன; இவர் பெயர் குறுங்கோளியூர் கிழாரெனவும் வழங்கும். இவர் பாடல் களுட் சிறந்த பகுதிகளின் கருத்துகள் வருமாறு: (1) அரச! ஐம்பூதங்களை அளந்தறிந்தாலும் அறிய லாகும்; உன்னுடைய அறிவு முதலியன அளந்தறிதற் கரியன. (2) சோற்றை ஆக்குந் தீயாலும் வெயிலாலும் உண்டாகும் வெம்மையேயன்றி உன் குடை நிழலில் வாழ்வோர்க்கு வேறு வெம்மையில்லை. ' (3) இந்திரவில்லை யன்றி வேறு கொலை வில்லையும், கலப்பையை யன்றி வேறு படைக் கலங்களையும் உன் நாட்டார் அறியார். (4) வயாவுற்ற மகளிர் விரும்பியுண்பாரேயன்றிப் பகைவர் நின் மண்ணை ஒருபொழுதும் நுகரார். (S) உன்னைப் பாடிய நா வேறொருவரையும் பாடாதபடி கொடுக்கும் வண்மையை உடையாய் நீ.