வஞ்சிமாநகரம்.
125
என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர்க்கு ஆண்டுதோறும் இக் காலத்தும் நடைபெறும் பங்குனியுத்தரத்திருவிழாவாகவே கருதப்படுகின்றது.
இனி, வஞ்சியை மேற்கூறிய கருவூராகக் கொள்ளாது,
மலைநாட்டுக் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களம்
என்று கருதுவாரும், அந்நாட்டு மேற்குத்தொடர்ச்சி மலை
அடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கருர்*[1] என்று
கருதுவாருமெனச் சரித்திரவறிஞர் பலராயினார். இவற்றுள்
முதலிற் கூறியது, அடியார்க்குநல்லார்க்கும் ஒத்த கொள்
கையாயிருத்தலே வியப்பைத்தருவதாம்.[2] ஆனால், இவ்வி
ரண்டுபக்ஷங்களும், ஆராயுமிடத்துச் சிறிதும் உறுதிபெற்றன
வாகக் காணப்படவில்லை. முதலாவது - திருவஞ்சைக்களம்
என்பது கொச்சிக்கு வடக்கே 10 - மைல் தூரத்தில் பேரி
யாறு மேல்கடலிற் சங்கமமாகுமிடத்து உள்ளதாம். மகோ
தை என்னும் கொடுங்கோளூரையடுத்துள்ள இவ்வூர், பாடல்
பெற்ற பழைய சிவதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தைப்
பற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகத்தில் - "கடலங்
கரைமேன் மகோதை யணியார் பொழில் அஞ்சைக்களத் தப்
பனே" என்ற தொடரே பாட்டிறுதிதோறும் பயின்று வருகின்
றது. எனவே, அந்நாயனார் காலத்துக்கு முன்பு அத்தலத்
துக்கு வழங்கிவந்த பழைய பெயர் அஞ்சைக்களம் என்பதே