காலவாராய்ச்சி.
179
இக்களவியலுரை எழுத்துருவடைந்தது எக்காலத்து? என்பது இனி ஆராயற்பாலது. அவ்வுரையெழுதியோராற் காட்டப்பட்ட உதாரணச் செய்யுள்களில் அரிகேசரி, பராங்குகன், நெடுமாறன் முதலிய பெயர்கள் தரித்த பாண்டியனொருவன், சங்கமங்கை நெல்வேலி முதலிய இடங்களில் போர் வென்றவனென்று விசேடமாகப் புகழப்படுகின்றான். சமீ பத்துக்கண்ட சின்னமனூர்வேள்விகுடித்*[1] தாமிரசாஸனங் களிற் குறிக்கப்பட்ட பாண்டிய வம்சாவளியால், அப்போர் களிலே வெற்றிபெற்ற அரிகேசரி - பராங்குசன் என்பான்[2] கி.பி. 770-ல் விளங்கிய[3] ஜடிலவர்மன் - பராந்தகனுடைய தந் தையென்பது தெளிவாகின்றது. இதனால் தந்தை அரிகே சரியின் காலம் கி.பி. 770-க்கு முற்பட்டதென்பது பெறப் படும். படவே, களவியலுரை இயற்றப்பட்ட காலம் அவ் எட்டா நூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்கு கின்றது. அன்றி, உரையெழுதியவர், தாம் காட்டும் உதார ணச்செய்யுளிற் கண்ட பாண்டியன தர காலத்தவரே (கி. பி. 760) என்றாலும், அவரிலிருந்து 10- தலைமுறை முற்பட்ட நக்கீரனார்க்கு ஐந்தா நூற்றாண்டே உரியகாலமாதல் வேண் டும் எவ்வாறெனின், பரம்பரை வமிசங்களைத் தலைமுறை
ஒன்றுக்கு 30 வருஷங்கொண்டளக்கும் முறைப்படி,[4] 1 அக்
- ↑ * Epigraphical Annual Report. 1907-8. p. 62. 68.
- ↑ + இவன், கி.பி. 76-ல் இருந்த நந்திபோதபல்லவமல்லனுடன் ஷை இடங்களில் போர் நிகழ்த்தியவனென்பர்.
- ↑ + இவன் காலம் கி.பி. 770 என்பது யானை மலைச்சாஸனத்தால் அரிந்தது. (செந்தமி. தொகுதி - 4. பூக்-336.)
- ↑ 1 பதிற்றுப்பத்திற் கண்ட சேரவரசர் எண்மருக்கு, அவரவர் பதிகங்கூறும் காலத்தைக்கொண்டு நோக்குமிடத்தும், தலைமுறையொ ன்றுக்கு 30-வருஷக்கொள்ளுதல், பழைய தமிழ்மக்களுக்கு அதிகமா காதென்பது விளங்குகின்றது.