இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேரமான் குட்டுவன்கோதை 365
கேட்டதும் ஆற்றாளாய்க் கண்ணீர் சொரிந்தாள்; அவளை யான் எங்ஙனம் ஆற்றுவேன்'’ என்று கூறலுற்றாள். தோழி கூற்றைப் பாட்டுவடிவில் தர வந்த ஆலம்பேரி சாத்தனார், கண்ணீரால் நனைந்த தலைவியின் கண்களை நினைத்தலும் பிட்டனுடைய குதிரை மலையிலுள்ள சுனைகளில் மலர்ந்து நீர்த் திவலையால் நனைந்திருக்கும் நீலமலர் நினைவிற்கு வரவே,
- “வசையில் வெம்போர் வானவன் மறவன்,
- நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்
- பொய்யா வாய்வான் புனைகழல் பிட்டன்
- மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
- அகல் அறை நெடுஞ்சுனைத் துவலையின் மலர்ந்த
- தண்கமழ் நீலம் போலத்
- கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே[1]”
என்று பாடித் தனது நன்றியினைப் புலப்படுத்தினார்.
சங்க காலத்து இரும்பொறை வேந்தருள் சேரமான் கணைக்கால் இரும்பொறையே இறுதியில் இருந்தவன். குட்ட நட்டின் தென்பகுதி, வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டது; வட பகுதியில் தொண்டிகர் சிறப்புற்று
- ↑ அகம். 77.