இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முடிப்புரை 399
வேந்தரின் செந்தமிழ்ப் பற்று எத்துணைச் சிறந்திருந்தது என்பது தெற்றென விளங்கும். சங்கத் தொகை நூல்களில் காணப்படும் சான்றோர் நிரலில் சேர நாட்டுச் சான்றோர் பலர் இருப்பதே மேலே கூறிய தமிழ் வளத்துக்குச் சான்று பகரும்.
இவ்வேந்தர் காலத்து அரசியல், வாணிகம், சமயம், சமுதாயம் முதலிய கூறுகள் தனித் தனியே ஆராயத் தகுவன. இவ்வரசர் பெருந்தகைகளின் வரலாற்றுக் குறிப்பும், அவை வழங்கும் கருத்துகளும் நுணுகி நோக்கின, சேரநாட்டு அரசின் கீழ் வாழ்ந்த செந்தமிழ்க் குடிகளின் சிறப்பு நமக்குப் புலனாகாது மறையவில்லை . விரிவஞ்சிப் பரிபாடல் கூறும் பாட்டொன்றைக் காட்டி அமைவாம்:
- “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
- பூவொடு புரையும் சீரூர்; பூவின்
- இதழகத் தனைய தெருவும்; இதழகத்து
- அரும்பொருட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
- தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்.”
❈❈❈