96 சேர மன்னர் வரலாறு
இனி, அவர்கள் கூறுமாறு பாண்டவ கெளரவர் செய்து கொண்ட போரைத் “தென்னாட்டில் ஒரு மூலையில் வாழும் ஒரு தமிழ் வேந்தன் பாராட்டி, அப்போரில் இறந்தோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவைத் தன்னாட்டில் செய்தற்கு ஒரு தொடர்பும் இல்லை; அந்நாளில் வடவாரியர்க்கும் தென் தமிழர்க்கும் சிறந்த நட்புரிமை இருந்ததாக எண்ணு தற்கும் இடமில்லை ; வடவாரியர் பிணங்கியதும் அவரைத் தென்னாட்டுத் தமிழர் “அலறத்தாக்கி[1]” வென்றதுமே சங்க இலக்கியங்களுள் பேசப்படுகின்றன. “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி[2]” “ஆரிய வண்ணலை வீட்டி[3]” “ஆரியவரசர் கடும்பகை மாக்களைக் கொன்று[4]” என்றெல்லாம் சங்கநூல்கள் கூறுவதைக் காணும் கின்றோம். அதுவே அவர் பொருட்டுச் சேரலாதன் விழாச் செய்திருக்கலாம் என அவர்கள் கூறுவது பொருந்தாது என்பது தெளிவாகிறது.
இனி, தென்னாட்டு ஊர்களில் பாரதம் படிப்பதும்[5] குறித்துத் தென்னாட்டுச் செல்வர்கள் பாரத விருத்தியென[6] நிவந்தங்கள் விடுவதும் இடைக்காலத்தும் பிற்காலத்தும் நடந்தன. சங்ககாலத்தே இந்நிகழ்ச்சிகள் நடந்தன என்று கொள்வதற்குச் சங்க நூல்களில் ஆதரவு சிறிதும் இல்லை.
இனி, சாக்கைக் கூத்து வகையில் அவிநயக் கூத்தின் விளைவாக நிலவும் கதகளி என்னும் கூத்தில் இறுதி