பக்கம்:சைவமும் தமிழும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 65 தன்மையால் உலகத்தோடு உடனாய் நிற்பன்' என்ற பேரொளியைப் பெற்று விளக்கம் அடைகின்றது. உமாபதி யின் வாக்கினால், “முதல்வன் உலகத்தோடு பொன்னும், ம்ணியும்போல் அபேதமும் ஆகாமல், இருளும் ஒளியும் போலப் பேதமும் ஆகாமல் சொல்லும் பொருளும்போலப் பேதாபேதமும் ஆகாமல், கலப்பினால் உடலின் உயிர்போல ஒன்றாயும், பொருள் தன்மையால் கண்ணில் அருக்கன் (சூரியன்) போல் வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன் மையால் கண்ணொளியும் ஆன்ம போதமும் போல உடனாயும் நிற்பன் என்று விளக்கம் பெறுகின்றது. இவ் வாறு அபேதம், பேதம் பேதாபேதம் என்னும் மூன்றற் கும் பொதுவாய் நிற்கும் நிலையே அத்துவிதமா என்பது தெளிவாகின்றதல்லவா? இவற்றையென்ன் இவ்வாறே கண்டு சிவஞானபோத மாபாடிய ஆசிரியர் தம் பேருரையில் ஆங்காங்கு இனிது விளக்கியுள்ளார். அமயம் வரும்போது அவ்வுரையையும் பயின்று மேலும் தெளிவு பெறுக. 3. அதற்கு முன் அந்த ஞானச் செல்வர் அத்துவிதம்’ என்ற சொல்லுக்குப் பொருள் விளக்கம் தருவதை ஈண்டுச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்". இச் சொல் அடிதுவி தம் என்று பிரியும். இதில் 'அ' என்னும் நகாரம் அன்மை, இன்மை, மறுதலை என்னும் மூன்று பொருளைத் தரும். அப்பிராமணன்' என்பதில் நகாரம் அன்மைப் பொருள் தந்தது; பிராமணனாய் இருந்தும் பிராமணன் அல்லனா யினான் எனப் பொருள் தருவதைக் காண்க.அப்பிரகாசம்' என்பதில் நகாரம் இன்மைப் பொருள் தந்தது. இங்குப் *பிரகாசம் இல்லை' எனப் பொருள் தருவதைத் தெளிக. அதர்மம்' என்ற சொல்லில் நகாரம் மறுதலைப் பொருள் தந்தது; தருமத்திற்கு மறுதலையாய் பாவம்' எனப் 2. கிஞ்ார்ே. 2-ஆம் சூத். அதிகரணம்-1. வார்த் 7 (6;-(சிற்றுரை) . - ఖ్వి , gజన్