பக்கம்:சைவமும் தமிழும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$兹 சைவ சமய விளக்கு லால் மகேசுரனுக்குக் கீழ் சம்பு பட்சம் இல்லையென்றலும் கூடாதாகும். ஆயினும், உலகத்தைத் தோற்றுவித்தல், திலை நிறுத்தல் ஆகிய இரண்டு செயல்களும் ஒடுக்குதல் தொழிலுள் அகப்பட்டு நிற்றலால், இவற்றுக்குரிய அயன் மால்களின் வடிவம் முதலியன அனுபட்சத்திற்கே உரியன எனவும், ஒடுக்கம் முதலிய தொழில்கட்குரிய மகேசுரன் முதலியோரது வடிவம் முதலியன சம்பு பட்சத்திற்கே உரியன எனவும் பாகுபாடு செய்யப்பட்டமையின், மகே சுரனுக்குக் கீழ் சம்பு பட்சம் இல்லை எனவும் கூறப்படும் என்பதை அறிந்து தெளிக. எனவே, மகேசுரனுக்குமேல் செல்லும் உயிர்கள் இந்நிலையில் உண்டாகும் இன்பங் களை நுகர்ந்து மகிழுமேயன்றி உலகத்தைச் செயற்படுத் தல் இல்லை; மகேசுரனுக்கீழ் வரும் சம்பு பட்சங்களது உண்மை தத்துவ உணர்வு கைவரப் பெற்றோர்க்கு அன்றி ஏனையோரால் உணர்தல் இயலாது. இந்நுண்ணுய கருத்தே மேற்கூறிய கூற்றிற்குப் பொருளாகும் என்பதை யும் சிந்தித்து உணர்க. இவ்வாறாக, இறைவன் உலகத்தைத் தொழிற் படுத்துதல் தானே செய்தல், பிறர் வாயிலாகச் செய்வித்தல் என்ற இரு வகையில் நடைபெறும் என்பதும், இவற்றுள் தானே செய்தல் எவ்விடத்தும் உர்து என்பதும், பிறர் வாயிலாகச் செய்வித்தல் அவன் அத்ை விரும்பியவழி மகே சுரனுக்குக்கீழ் அனந்தர், உருத்திரர் முதலியவரீடத்தே நிகழும் எ ன் ப. து ம் அறிந்தவையே. இச் செய் வித்தல் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்று நிலைகளில் வைகரி மத்திமை’ என்ற வாக்குகளிலும், காலம், கலை முதலிய முப்பத்தொரு தத்துவங்களிலும் நடைபெறும்; "செய்தல்’ என்பது, அதீதம் முதலிய ஐந்து நிலைகள், சூக்குமை முதலிய நான்கு வகை வாக்குகள், சிவ தத்துவம் முதலிய முப்பத்தாறு தத்துவங்கள் ஆகிய அனைத்திலும் நிகழ்வதாகும். இவை யாவும் தத்துவங் களின் இயல்பை விரித்துக் கூறுமிடத்து இனிது விளக்கம் எய்தும்.