பக்கம்:சைவமும் தமிழும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் . 99 சிவபெருமானுக்குக்கீழ் செயலாற்றும் அயன், அரி, அரன்’ என்னும் காரணக் கடவுளர்கள் முதலியோரைப் பற்றியும் சிறிது கூறுவேன். இவர்கட்கெல்லாம் வடிவம் தொழிலுமாக ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றில் கூறப் பெற்றுள்ளன; இவர்கட்குள்ளே அமைந்த வேறுபாடுகளையும் ஆங்குக் காணலாம் . மாசுடை உலகில் நிற்பினும் மக்கள் போலன்றி பொதுச் சிவ புண்ணியத்தால் 'ஏதோ ஒரோவழித் தூய உலகில் அரிதிற் சென்று இறைவனின் உண்மைத் திருமேனியை அரிதிற்கண்டு திரும்பக் கூடுபவர்கள் தேவர்கள்; இவர் களுக்குள்ளும் மேற்கூறியவற்றைச் சிறிது எளிதிற் பெறக் கூடியவர்கள் இந்திரன் முதலிய இறையவர்கள். இவ்விரு வகைத் தேவர்கள் போலன்றி தமது உண்மைச் சிவ புண்ணியத்தால் துனய உலகத்தைப் பெற்று இறைவனை அவனது உண்மைத் திருமேனியில் எளிதிற் கண்டு வாழ் வோர் உருத்திரர்களாவர். х மற்றும், தேவரும் திசைக் காவலரும், அயன், மால் என்னும் காரணக் கடவுளரும் இறைவனை ஏதோ ஒருகால் காணப்பெற்றாலும், தம் இடம்பு தாம் இருக்கும் உலகு முதலியவற்றின் சார்பால் ப்லகாலும் அவனை மறப்பர்; தம் தொழிலுக்குத் தம்மையே முதல்வராகவும் கருதி மயங்குவர்; அம்மயக்கம் காரணமாக அத்தொழில் நிகழுங் கால் சில சமயம் மகிழ்ச்சியும் சில சமயம் வாட்டமும் உற்றுத் தொடக்குறுவர். தம் தம் பதவிகளின் உயர்வு தாழ்வுகளில் விருப்பு வெறுப்புகளில் பொருந்துதலும் உடையர். உருத்திரர் நிலையோ முற்றிலும் வேறு. இவர் தம் உடம்பு, உலகு முதலியவற்றின் சார்பால் இறைவனை யாண்டும் மறவாதும், தம் தம் தொழில் நிகழ்ச்சிகளில் 84. மனம் மொழி மெய்களால் சிவபிரானை நோக்கிச் செய்யப்பெறும் நற்செயல்கள் யாவும் சிவபுண்ணியமாகும்; இவை பதிபுண்ணியம் எனவும் வழங்கப்பெறும்.