பக்கம்:சைவமும் தமிழும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 崔{}别 என்று சொல்லப்பெறுவன யாவும் தத்தம் அளவிற்குச் சக்திகளை யுடையவை. கியூட்டனின் விதிகளாலும் இதனை அறிந்து தெளியலாம். ஐம்பெரும் பூதங்களுள் ஆகாயமே பெரியது; ஏனைய பூதங்களின் சக்திகளைவிட இதன் சக்தி பெரியது. ஏனையவை யாவும் இதனுள் அடங்கி நிற்கின்றன. ஏனைய பூதங்கள். உள்ள இடங் களில் ஆகாயம் உள்ளது; ஆகாயம் உள்ள இடங்களிலெல் லாம் ஏனைய பூதங்கள் இல்லை’- என்பதைச் சிந்திக்க, எல்லாவற்றிலும் மிகப் பெரிய பொருளாகிய (பிரம்மம்என்ற வட சொல்லின் பொருளும் இதுதான்) இறைவனது சக்தியை ஆகாயத்தோடு ஒப்புமைப் படுத்தி வழங்குவர் நம் நாட்டு ஞானச் செல்வர்கள். 'தன்னருள் வெளிக்குளே, அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கு இச்சை வைத்து' என்று தாயுமான அடிகளும் சிவத்தின் சொரூப இயல்பினைக் கூறுவதனால் இது தெளிவாகும். ஆகா யத்தை அருள் வெளி என்று கூறியுள்ள துட்பத்தை உணர்ந்து மகிழ்க. மேலும், அந்த ஞானச் செல்வர் பதியையே சுகாரம்பப் பெருவெளி', 'சித்தாந்தப் பேரொளி', 'தீதில் பொருள்”, பூரண ஆனந்தப் பொருள்', பெரிய பொருள் (பிரம்மம்) என்றெல்லாம் குறிப்பிடுவ தைச் சிந்தித்து மகிழலாம். பொருள் வணக்கம்’ என்ற பகுதியில் உள்ள 12 திருப்பாடல்களும் இறைவனின் சொரூப-நிலையை விளக்குவதைப் படித்து உணர்ந்து தெளிக, - பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங். களாகிய உலகங்களும் மாயை' என்ற ஒரு பொருளாகும். இதனால் மாயை மிகப் பெரிய சக்தி என்பது தெளிவாகும். கன்மம்' என்பது இவ்வுலகங்களில் எங்கும் நடைபெறும் எல்லாச் செயல்களிலும் உண்டாகி எங்குச் செல்லினும் 92. தா, பா. பரசிவ வணக்கம்-1 93. டிெ. பொருள் வணக்கம்-1