பக்கம்:சைவமும் தமிழும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 137 என்ன? பிணமான உடம்பில் பூதங்களுள் ஒன்றாகிய காற்றுப்போல் ஆகிவிடுமாதலால் அறிவு இல்லை என்று சமாதானம் கூறினும் கூறலாம். ஆனால் உறக்கத்தில் காற்று இருக்கவும் அறிவு செயற்படவில்லை. ஆகவே, பரு உடம்பு உயிரன்று; உயிர் பருவுடம் பிற்கு வேறானதாகும், என்பது. ஐம்பொறிகள் உயிராகாமை : மெய், வாய்,கண், செவி, மூக்கு என்னும் ஐம்பொறிகளும் ஊறு, சுவை, ஒளி, ஒசை, தாற்றம் என்னும் ஐம்புலன்களையும் அறிவன வாதலா லும், அவற்றை அ றி ப ைவ ஐம்பொறிகளேயன்றி வேறில்லையாதலாலும் ஐம்பொறிகளே உயிர் என்பர் இந்திரிய வாதிகள். இக் கருத்தினை மறுத்து மெய்கண்டார் கூறுவது: "ஐம்பொறிகளே உயிர் எனின், ஒவ்வொரு பொறி ஒவ்வொரு புலனை அறிவதன்றி, மற்றைய புலன் களை அறிவதில்லை. ஒரு பொறி அறிவதனை மற்றொரு பொறி அறிய முடிவதில்லை. அன்றியும், ஐம்பொறிகள் பிறபொருள்களை அறியுமேயன்றித் தம்மையே தாம் அறியமாட்டா. அதாவது கண் உருவத்தை அறியும்; யான் கண் என்றும், யான் உருவத்தைக் காண்கின்றேன்" என்றும் அறியமாட்டாது; அதனால், இதுகண்‘ என்றும், "இஃது உருவத்தைக் காண்கின்றது என்றும் அறிய முடி கின்றதில்லை. எனவே, ஐம்பொறிகளையும் தனித்தனியே இயக்கி அவ்வைம் பொறிகளாலும் ஐம்புலன்களை அறிந்து பயன் கொள்வதாகிய ஆன்மா இவற்றின் வேறு ஆகும். ஆயின் இவர்தம் கருத்தும் ஏற்புடைத்தன்று' என்ப தாகும். நுண்ணுடம்பு உயிராகாமை : மனம் முதலிய உட்கருவி களையுடைய நுண்ணுடம்பே (அக உடம்பே) ஐம்பொறி கள் வழியாகப் புலன்களை அறிவதால் அதுவே ஆன்மா வாகும் என்பர் சூக்கும் தேகான்மவாதிகள். நுண்ணுடம்பு கனவு நிலையில் செயற்பட்டு நிற்பது என்பது அனைவர்க் கும் உடன்பாடு. ஆனால் நுண்ணுடம்பே உயிர் என்பதை