பக்கம்:சைவமும் தமிழும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் 崔峰3 பொருள்களை அறியும்பொழுதும் எல்லாப் பொருள் களையும் ஒருங்கே அறிவதில்லை. ஒவ்வொன்றாகவே அறி கின்றன. அஃதாவது, ஒரு பொருளை ஒரு கணத்திலும், மற்றொரு பொருளை அடுத்தக் கணத்திலுமாக அறி கின்றன. இவ்வாறு ஒவ்வொன்றாக அறியும்பொழுதும் இடைவிடாது அறிதலின்றி விட்டு விட்டே அறியும். அப் பொழுது நினைப்பையும் மறப்பையும் மாறி மாறிப் பெற்று நிற்கும். அறிந்தவற்றை மறக்கும் தன்மையும் உயிர் களுக்கு இருப்பது தெளிவு. இத்துணைக் குறைபாடு களுடைய சிற்றறிவாகிய உயிரைப் பேரறிவாகிய பரப் பிரம்மத்தின் பிரதிபிம்பம் எனக்கூறின் அது பொருள் களின் பெற்றியை நன்கு உணராது கூறும் கூற்றேயாகும். ஆதனால் ஏகான்மவாதிகள் (பிரம்மான்மவாதிகள்) 'சீவான் மாவும் பரமான்மாவேயன்றி வேறில்லை’ எனக்கொண்டு நானே பிரம்,ம், எனக் கூறிக்கொன்ளுதல் மயங்கிக் கூறிக் கொள்ளுதலாகும்.” . மற்றும், பரப்பிரம்மத்தின் அறிவு எஞ்ஞான்றும் தனக்குப் பிறிதொரு துணை வேண்டாது தானே விளங்கி நிற்பதாகலின், அது சுயம் பிரகாசம்’ என்பதாகும். உயிரின் அறிவு அவ்வாறின் றி எஞ்ஞான்றும் யாதாயினும் ஒரு துணையைக்கொண்டே விளங்குவதாகலின் அது வியஞ்சகப் பிரகாசம்’ என்பதாகும். அதனால் வியஞ்சகப் பிரகாச அறிவாகிய உயிர் எவ்வாற்றானும் சுயம்பிரகாச அறிவாகிய பரப்பிரம்மம் ஆமாறு இல்லை.” பின்னும், பரப்பிரம்மத்தின் அறிவு பிறிதொன்றால் திரிபெய்தாது, எஞ்ஞான்றும் தன் தன்மையிலேயே நிற்பது. அதனால் அது சுதந்திரமான அறிவாகும். உயிரின் அறிவு அவ்வாறின்றி அடுத்தது காட்டும் பளிங்குபோல், அறியப் பட்ட பொருளின் தன்மையே தன் தன்மையாகத் திரிந்து நிற்கும் இயல்புடையது. அதனால் அது பரதந்திரமான அறிவு ஆகும். இதனை நன்கு உணர்ந்தால் பரதந்திர அறி வான உயிர் எவ்வாற்றானும் சுதந்திர அறிவான பரம் பிரம்மம் ஆமாறு இல்லை என்பது தெளியப்படும்."