பக்கம்:சைவமும் தமிழும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雷4露 சைவ சமய விளக்கு அசம்பாவிதம் என்ன என்பதை விளக்க வேண்டியதா கின்றது. இனம் என்பதும், சாயை அல்லது கூறு' என்பதும் ஒன்றாகாது. ஏன்? தேமா, புளிமா என்னும் இரு மரங் களும் மரம் என்னும் ஓர் இனத்தைச் சேர்ந்தவை என்பத னால், ஒன்றன் சாயை அல்லது கூறே மற்றொன்று என்று கூறுதல் கூடுமோ? தேமாவின் கனி இனிப்பது; புளிமாவின் கனி புளிப்பது; இரண்டிலும் ஒன்றன் கூறு மற்றொன்றாதல் எவ்வாறு? இங்ங்னமே, எட்டி மரமும் பலா மரமும் மரம்: என்னும் அளவில் ஓர் இனமாயினும் பலாவின் கனி இனிப் புடையதாயிருக்க, எட்டியின் கனி கசப்புடையதாய் நஞ்சாகி இருக்கின்றதன்றோ? இந்த இரண்டிலும் ஒன்றன் கூறு பிறிதொன்றாகாது என்பது வெளிப்படை. இவ்வா றெல்லாம் நுணுகி நோக்கின் இனம் என்பதும், சாயை அல்லது கூறு' என்பதும் வெவ்வேறு கருத்துகளையுடை யவை என்பது தெளிவாகும். இக் காரணத்தால் பதிக்குப் பசு தன் இனம் என்றிருந்தாலும், பதியின் சாயை அல்லது பிரதிபிம்பம் அல்லது கூறுதான் பசு' என்பவரது கொள் கையை ஒப்புக் கொள்ளுதல் இயலாது. மேற்கூறியவற்றால் நீ ஒருவாறு தெளிவு பெற் றிருப்பாய் என்று கருதுகின்றேன். பதியின் அறிவு மேற் கூறிய பெருமையை எல்லாம் உடைமையால் அது சூக்கும சித்தாயும் மாற்றம் எய்தாததாயும் உள்ளது. ஆதலால், அதனைப் பாசம் பற்றுதல் இல்லை. பசு அவ்வாறின்றி மேற்கூறிய சிறுமைகளையெல்லாம் உடைமையால் அது தூல சித்தாயும் தான்.அடுத்த பொருளின் தன்மையை எய்தி நிற்பதாயும் இருத்தலால் அதனைப் பாசம் பற்றுவ தாகின்றது. ஆகையால் பதி அநாதி முத்த சித்துரு (இயல் பாகவே பாகங்கள் நீங்கிய அறிவுடையது) என்பதும், பசு அநாதி பெத்த சித்துரு (இயல்பாகவே பாசத்திற் கட்டுண்டு கிடக்கும் அறிவுரு உடையது) என்பதும் தெளிவாகின்ற தல்லவா? பசு' என்பதற்கே பாசத்தால் கட்டுண்டு கிடப்பது என்பதுதான் பொருள் என்பதை முன்னரும்