பக்கம்:சைவமும் தமிழும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சைவ சமய விளக்கு ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க." என்ற மணிவாசகக்ரின் மணி வாக்கால் இதனைத் தெளிய லாம். உயிர்கள் எண்ணிறந்தன என்பதை மெய்ப்பிப் பதற்குச் சான்று ஒன்றும் வேண்டா. ஒர் உயிர் ஒர் உடம்பில் நின்று அநுபவிக்கும் இன்ப துன்ப அனுபவங்கள்-நுகர்ச்சி கள்-மற்றோர் உயிர்க்கு இல்லாமையால், ஒவ்வோர் உடம்பில் உள்ளதும் தனித்தனி வேறுவேறு உயிரே என்பது எளிதில் தெளிவாகும். அதுவன்றி, பல உடம்புகளில் உள்ள உயிர்களும் ஒன்றே என மெய்ப்பிப்பதற்கு வழி இல்லை. ஆதலின் உயிர்கள் ஒன்றல்ல, பலவேயாம் என்பதை அறிந்து தெளிக. பதியும் அறிவுடையது, பசுவும் அறிவுடையது என்பதை நீ நன்கு அறிவாய். என்றாலும் பதியின் அறிவு தானே விளங்குவது; அறிவிப்பதற்குத் துணை ஒன்றையும் வேண் டாதது. ஒரு பொருளை அறியுங்கால் அறியப்பட்ட பொருளில் அழுந்தி அதன் தன்மையைப் பெறாது தன் னியல்பில் நின்றே அறிவது; அதனால் அது சுதந்திர அறிவு' என்று வழங்கப்பெறும். பசுவினது அறிவு அவ்வாறன்றிப் பிறிதொரு பொருள் அறிவிக்கவே அறியும் தன்மை யுடையது. அங்ங்னம் அறியும்பொழுதும் அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையதாகியே அறிவது; அதனால் அது பரதந்திர அறிவு என வழங்கப்பெறும். அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையதாதல் சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று வழங்கப்பெறும். பதி யினது அறிவு பொருள்களை ஒவ்வொன்றாய் அறியாமல் எல்லாவற்றையும் ஒருங்கே அறிவது, மேலும் அவற்றை இடைவிடாது அறிந்தவாறே அறிந்து நிற்பது. அதனால் அது பேரறிவு அல்லது முற்றறிவு என வழங்கப்பெறும். பசுவினது அறிவு அவ்வாறன்றி ஒருகாலத்து ஒரு பொருளை 9. திருவா. சிவபுரா. அடி.5