பக்கம்:சைவமும் தமிழும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் # 59 தேனார் கமலமே சென்று தாய் கோத்தும்.பீ." பொன்னங் கழலுக்கே சென்று தாய் கோத்தும்பீ: தேனுந்து சேவடிக்கே சென்று தாய் கோத்தும்.பீ.' செய்யார் மலரடிக்கே சென்று தாய் கோத்தும்பீக்" என்ற அப்பெருமானின் தொடர் வாக்குகளும் இம்மரபை உணர்த்துகின்றன. இப்பதிகத்தின் பழைய குறிப்பு சிவனோடைக்கியம்’ என்று தெரிவிப்பதையும் ஒர்ந்து உணர்க. இங்ங்னமெல்லாம் வரும் மரபினை நோக்கும் போது திருவடிக்கீழ் இருத்தல்’ என்பதன் உண்மைப் பொருள் தெளிவாவதை உணர்ந்து மகிழ்க. இக்கறிய வற்றால் ஆன்மா வியாபகமல்லது பிறிதாகாது என்பதை யும் உளங்கொள்க. இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ அறிய வேண்டும். அறிவினது நிலை வேறுபாடே இச்சையும் செயலும் என் பதை நீ நன்கு அறிவாய். உயிர் அறிவுடையதாதலின் இச்சையும் செயலும் அதனுடையது என்பதும் பெறப்படும். ஆகவே, உயிர்களும் இறைவனைப்போலவே ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி என்னும் மூவகை சக்திகளையும் உடையனவாகின்றன. இதனால் இறைவனும் உயிரும் சமமாய் விடுமே என்று நீ கருதலாம். அதுதான் இல்லை, இறைவன் சூக்குமப் பொருள் என்பதையும் உயிர் துாலப் பொருள் என்பதையும் நீ அறிவாய். அதனால் இறைவனது அறிவு இச்சை செயல் ஆகியவை சூக்குமமுடையவை; 22. டிெ.2 23. டிெ-11 24. டிெ-15 25. டிெ.17