பக்கம்:சைவமும் தமிழும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் # 63 சகலம்-கலையோடு கூடுதல் எனப் பொருள்படும். கலை மாயா காரியம். இந்நிலையில் சகலாவத்தையில் உயிருக்கு அறிவு, இச்சை, செயல் ஆகிய அனைத்தும் உண்டு. வினைகளை ஈட்டி அவற்றின் பயன்களை நுகர் தலும் உண்டு. இந்நிலையில் உயிர் பெரிய பொருளை அறிய மாட்டாது; சிறிய பொருளையே பெரிதாக மயங்கி அவற்றை அடைய விரும்பி முயலும் சிற்றறிவு, சிற்றிச்சை சிறு தொழில் இவற்றை உடையதாகும். இந்நிலையை "மருள் நிலை என்று வழங்கலாம். சுத்தாவத்தை : மேற்குறிப்பிட்ட விண் மண் பாதலம் என்னும் மூவுலகங்களிலும் மாறி மாறிப் பிறந்து இன்பத் தைப் பெறவும் துன்பத்தைப் போக்கவும் விருப்பும் உயிர் அவற்றிற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து அறிகின்றன்து; அவ்வழிகளில் முயன்று எண்ணிய பயன் எண்ணியவாறே கை கூடுமாயின் இன்பத்தை அடைகின்றது. கைகூடாத வழி துன்பத்தை நுகர்கின்றது. விருப்பு வெறுப்புகளையும் அடைகின்றது. இந்தச் சுழற்சியால் ஆணவமலத்தின் சக்தி மெலிவடைவதால் சிறு பொருள்களின் மீதுள்ள நாட்டம் மாறிப் பெரும் பொருளை அடையும் நோக்கம் உண்டா கின்றது. அப்பொழுது இறைவன் குருவாகி வந்து முப் பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்த்தி மெய் ணர்ஆைத் தி, தின், சின், இந்தது இருய்யுணர்வால் . జేఫ్రికీ - |్యప్టీ நின் மலனாகிய இறைவனை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை எய்தப்பெறுகின்றது. இந்த நிலையே சுத்தம் என்று வழங்கப் பெறும். மாசாகிய மலங்களினின்றும் முற்றிலும் நீங்கி உயிர் தூய்மை பெற்றதால் சுத்தாவத்தை என்ற பெயரைப் பெறுகின்றது என்பதை அறிந்து தெளிக. இந் நிலையில் உயிர் இறைவனது அருளையே பற்றுக் கோடாகக் கொண்டிருப்பதால் இந்திலையை "அருள் நிலை: என்று வழங்கலாம். இந்த மூன்று அவத்தைகளைப்பற்றியும்,