பக்கம்:சைவமும் தமிழும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕总霸 சைவ சமய விளக்கு என்று இதனை விளக்குவர். ஆயினும், இப்பொது வுண்மை சில இடங்களில் மாறுபடுவதையும் காண்கின்றோம். இரவு பகலாக உழைப்பவர்கள் வறுமையால் வாடுவதையும், சிறிதும் உழைக்காதவர்கள் செல்வத்துடன் இன்புற்றுத் திகழ்வதையும் நாம் காணாமல் இல்லை, ஆகவே, முயற்சி யும் அஃதின்மையும் செல்வத்திற்கும் நல்குரவிற்கும் காரணங்கள் அல்ல என்பது பெறப்படுகின்ற தன்றோ? ஒரு சிலர்க்குப் பிறப்பிலேயே முன்னோர் ஈட்டிவைத்த செல்வம்கிடைத்துவிடுகின்றது; இங்கு முன்னோரின் முயற்சி இவர்கட்குப் பயனைத் தருன்றது. இஃது உணமையேயாயி னும், ஒருவர் செல்வக் குடும்பத்தில் பிறந்து, முயற்சியின்றி பிறப்பிலேயே செல்வராய் விளங்க, மற்றோருவர்க்கு அந்த வாய்ப்பில்லாது போவதையும் காணத்தான் செய் கின்றோம். இதனால் ஒருவர் செல்வ வீட்டு மகவாய்ப் பிறத்தலும் காரணம் இல்லாத நிகழ்ச்சியன்று என்பதையும் நீ உணர்தல் வேண்டும். செல்வமும் ஒருவரிடம் என்றும் நிலைத்திருப்பதில்லை; நீங்கவும் காண்கின்றோம். அகடுற யார்மாட்டு கில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்." - 'அகடு-நடுநிலைமை; என்ற நாலடியாரையும் காண்க. நல்வினை உள்ளவரை செல்வம் ஒருவரிடம் இருக்கும்; அது நீங்கியவுடன் அச் செல்வமும் நீங்கிவிடும் , ஆகவே, உயிர்கள் அடையும் செல்வத்திற்கும் வறுமைக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற் கும் அவை முன் செய்த வினையே காரணமாகும். இவ்விடத்தில் ஒர் ஐயம் நின்பால் எழலாம். இன்ப துன்பங்களுக்கு முன் செய்த வினையே காரணமாயின் அவை முயற்சியின்றியே வருதல் வேண்டும்; அவ்வாறின்றி முயற்சிக்குத் தக்கபடியே அவை உண்டாவது ஏன்? என்று 16. நாலடி.2