பக்கம்:சைவமும் தமிழும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塑党领 இச அ விளக்கு உணர்ந்து தெளிவாயாக. மற்றும், ஊர்த்துவமாயை' 'மகாமாயை, குடிலை", "விந்து’ என்பன சுத்தமாயையின் வேறு பெயர்கள் என்பதையும், அதோ மாயை மாயை' "மோகினி' என்பன அசுத்து மாயையின் வேறு பெயர்கள் என்பதையும் மான் அவ்யக்தம்’ என்பன பிரகிருதிமாயை யின் வேறு பெயர்கள் என்பதையும் கருத்தில் இருத்துக. இவ் வாறு மும்மாயைகளையும் நன்கு உணர்ந்து தெளிவாயாக, அன்டன், கார்த்திகேயன். } அன்பு நி ைறந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலம் பல விளைவதாகுக. சென்ற கடிதத்தில் மாயையினின்றும் தத்துவங்களே முதவில் தோன்றும் என்றும், அத் தத்துவங்களினின்றே உலகம்தோன்றும் என்றும் குறிப்பிட்டேன் அல்லவா? இவற்றை இக்கடிதம் தொடங்கி ஒரு சில கடிதங்களில் விளக்குவேன். அதற்கு முன்னர் காரணங்களினின்றும் காரியங்கள் தோன்றும் முறை இவை என்பதை முதலில் தெளிவிப்பேன். பெரிய சர்க்கஸ் கம்பெனியார் ஒரிடத்திலிருந்து பிறிதேர ரிடத்திற்குச் சென்று வட்டரங்கு அமைக்க என்ன செய்கின் றனர்? மிகப் பெரிய துணியைக் கொண்டு கூடாரம் அமைக் கின்றனர். எனவே, கொட்டகைக்குத் துணி காரணமாகின் றது. துணியாகிய காரணம் எப்படி வீடாய்க்காரியப்பட்டது? முன்பு யானையின் மீதும், வண்டிகளின் மீதும் ஏற்றப்பட்டு மூட்டையாய் ஒடுங்கிக் கிடந்த துணிகள், பின்பு, விரிந்து பெரிய மாளிகை போன்ற கொட்டகையாய்க் காட்சி பளிக் கின்றன. இவ்வாறு சுருங்கியிருந்த காரணப் பொருள் விரிந்து நின்று காரிய மாதலை விருத்தி என்ற பெயரால்