பக்கம்:சைவமும் தமிழும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சைவ சமய விளக்கு காண நேரிடுங்கால், முன்னர் ஐயம் தோன்றிப் பின்னர்த் துணிவு பிறக்கும். அவ்வாறன்றிப் புதியதாக ஒரு பொரு ளைக் காண நேரிடின், இஃது யாது?’ என்ற அவாய் நிலை யன்றி ஐயமும், துணிவும் தோன்றா என்பதை நீ அறிவாய். அப்பொழுது அப் பொருளை அறிந்தான் ஒருவன் இஃது இன்னது என அறிவித்தவழி துணிவு பிறக்கும். சில சமயம் சபுத்தி தத்துவம் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாறித் துணிதலும் உண்டு. இது துணிவு அன்று; திரிவு (விபரீதம்) என்பது அதன் பெயர். புத் தி நன்மை, தீமை என்ற இரண்டற்கும் பற்றுக்கோடாதலின் திரிபு அதன் கண் குற்றமாய் நின்று, பின்னர் மெய்ம்மையால் போக்கப் படும் என்பதை அறிக. அந்தக்கரணங்களை மனம், புத்தி, சித்தம் அகங்காரம்', என்று இவ்வாறு கூறினாலும், அவற்றின் தேற்றம் "சித்தம், புத்தி, அகங்காரம், மனம்’ என்னும் முற்ைபில் தான் என்பதை மேற்கண்ட விளக்கத் தால் தெளியலாம். - ஞானேந்திரியங்கள் ஐந்து: தைசதாகங்காரத்தினின்றும், மனம் முதற் கண் தோன்றும் என்றேன். இதனை அடுத்து ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். இவை முறையே ஒன்றன்பின் ஒன்றாகச் செவி, தோல் (மெய்). கண், நாக்கு (வாய்), மூக்கு என்பவையாகும்." இவை முறையே புறத்தே உள்ள ஓசை, ஊறு. ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன் களையும் பொதுவாக ஆன்மா அறிவதற்குக் கருவியாகும். ஒளி என்பதும் உரு என்பதும் ஒன்றே. உரு-நிறம். வல் லோசை, மெல்லோசை என்றும் வன்மை, மென்மை என்றும், செம்மை கருமை, வெண்மை என்றும், கைப்பு, இனிப்பு என்றும், நறுமணம், தீ மணம் என்றும்-இவ்வாறு பகுத்தறியாமல், இஃது ஒர் ஒசை, இஃது ஒர் ஊறு, இஃது 64. இவை ஐந்தும் வட மோழியில் சுரேத்திரம், துவக்கு சட்சு, சிங்கவை, ஆச்சாணம் என்று கூறப்பெறும்.