பக்கம்:சைவமும் தமிழும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 249 மாத்திரையினின்றும் ஆகாயமும். பரிச தந்மாத்திரை யி னின்றும் வாயுவும், ரூப தந்மாத்திரையினின்றும் தேயுவும் (நெருப்பும்), இரது தந்மாத்திரையினின்றும் அப்புவும் (நீரும்), கந்ததன் மாத்திரையினின்றும் பிருதிவியும் (நிலமும்) முறையே தோன்றும். இவை தூலமாதலின், துரல் பூதங்கள், மகா பூதங்கள் என்று வழங்கப்பெறும். இப்பூதங்கள் தம் தம் முதற் காரணமாகிய தந் மாத்திரை களின் சத்தம் முதலிய குணங்களைப் பெற்றிருத்தவின், அவற்றை அறியும் செவி முதலிய ஞானேந்திரியங்கட்கு திலைக்களமாய் நின்று அவற்றிற்கு வலிமையைத் தந்து நிற்கும். அதுவன்றி வாக்கு முதலிய கன்மேந்திரியங்கட்கும் நிலைக்களமாய்ப் பேசுதல் முதலியவற்றிற்குத் துணை புரிந்து நிற்கும். ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்தும் சத்தம் முதலிய குணங்கள் ஐந்தனையும் ஒன்று முதல் ஐந்து ஈறாக ஒவ்வொரு குணத்தை ஏற்றமாகப் பெற்று நிற்கும். இதன்ை, பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி", என்பன முதலாக வரும் திருமொழிகளாலும் உணர்ந்து கொள் ளலாம், காரியத்தின் தன்மையே காரணத்திலும் இருக்கு மாதலால் இவற்றிற்கு முதற்காரணமாகிய தந்மாத்திரை களும் இத்தன்மையனவேயாகும். அதாவது சத்த தந் மாத்திரையொன்றே தனிப் பொருளாய் நிற்க, ஏனைய தந்மாத் திரைகள் தான்கும் முன்முன் சொல்லியவற்றோடு தாம் சிறப்பாகக் கூடி இரண்டு, மூன்று. நான்கு, ஐந்து என்னும் குணங்களையுடையனவாய் பரிச தத்மாத்திரை, ஆளுட தந்மாத்திரை முதலாகப் பெயர் பெற்று நிற்கும் என்பதை உணர்ந்து தெளிக. 87. திருவா. போற்றித் திருவசவல்-அடி (337-188)