பக்கம்:சைவமும் தமிழும்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 3{}3 அவற்றினும் இவை சிறப்புடையனவாகின்றன. எனவே, *சிவபெருமானது முழுமுதல் தன்மையை உணர்ந்து அவனுக்குத் தொண்டு புரியவேண்டும் எனக் கருதி மேற் குறிப்பிட்ட சரியை, கரியை யோகங்களைச் செய்தல் புத்தி பூர்வ சிவபுண்ணியம் என்பது தெளிவாகின்றது. இதனை நன்கு மனத்தில் இருத்துவாயாக. புத்தி பூர்வமாகச் செய்யப்படும் சிவ புண்ணியங் களும் பொது, சிறப்பு என்று இருவகையாகின்றன. ஒருவர் நல்லாசிரியரது தீக்கை பெற்று அதனால் சிவபுண்ணியங் களைச் செய்யும் தகுதியையும் அடைந்து, செய்யும் முறை யறிந்து அம் முறைப்படி செய்பவை சிறப்புச் சிவபுண்ணியங் கனாகும். அங்ங்ணமின்றித் தாமே தமக்குத் தோன்றிய வாறு செய்யின் அவை பொதுச் சிவபுண்ணியங்கள் ஆகின்றன. - சிவபுண்ணியங்கள் இன்னொருவிதமாகவும் வகைப் படுத்தப்பெறுகின்றன. தீக்கை பெற்றேனும் பெறா மலேனும் சரியை கிரியை யோகங்களாகிய சிவபுண்ணியங் களைச் செய்வோர் அனைவரும் அப்பெருமானிடம் கொண்ட அன்பு காரணமாகப் பயன் கருதாது செய் கின்றனர் என்று சொல்ல முடியாது. பலர் தம் செயலுக்குப் பயனாகக் கல்வி, செல்வம், வெற்றி, புகழ், மனை, மக்கள் முதலிய உலகியல் பயன்களுள் ஒன்றையோ பலவற்றையோ விரும்பிச் செய்பவர்கள். இவர்கள் சிவபெருமானிடம் செலுத்தும் அன்பு நேரே செல்லும் மெய்யன்பு ஆகாது; இது தாம் கருதும் பயன்வழியாகச் செல்லும் சார்பு பற்றிய அன்பாகும். இச்சார்புபற்றிய அன்பினால் வரும் சிவபுண்ணியம் பின்னர் மெய்யன்பையே விளைவிக்கு மாதலால் அஃது உபாயச் சிவ புண்ணியம்' என்று கருத முடி கின்றது. தீக்கை பெற்றேனும் பெறாமலேனும் சிவ பெருமானிடத்துக் கொண்ட அன்பே காரணமாக, யாதொரு பயனையும் கருதாது செய்யும் சரியை முதலிய வைகளே உண்மைச் சிவ புண்ணியங்கள்’ என்று கருதப் பெறுகின்றன.