பக்கம்:சைவமும் தமிழும்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் - என்ற திருப்பெயர் பெற்றது. சமய தீக்கை பெற்றவன் சமயி“ எனப் பெயர் பெறுகின்றான். விசேட தீக்கை: சமய தீக்கை பெற்று அதன் வழி நிற்கும் போது ஆணவ மலம் மேலும் பரிபாகம் உற்றுச் சக்தி நிபாதம் மந்தமாய் நிகழும். அப்பொழுது சிவபெருமானை இலிங்க வடிவில் கண்டு வழிபடுதலாகிய கிரியைத் தொண்டில் இச்சை உண்டாகும். அங்ங்ணம் இச்சை யுண் டாகும்போது முன்னர் சமய தீக்கையைப் பெற்றவரிடத் தாதல் வேறோர் ஆசிரியரிடத்தாதல் விசேட தீக்கை பெற்றுத் தம் பொருட்டான (ஆன்மார்த்தமான) சிவலிங்க மூர்த்தியை எழுந்தருள்வித்துக் கொடுக்கப் பெற்றுக் கிரியாபாத முறைப்படி அம் மூர்த்தியை நாடோறும் நியம 'மாக வழிபடுதலாகிய கிரியைத் தொண்டில் நிற்பர். சிவலிங்க மூர்த்தியை எழுந்தருள்வித்துக் கொடுக்கும் பொழுதே அகப்பூசை புறப்பூசை முறைகளோடு யோக முறையும் உணர்த்தப்பெறும். கிரியைத் தொண்டினால் ஆணவமலம் மேலும் பரிபாக முற்றவழிச் சத்தி நிபாதம் தீவிரமாய் நிகழும். இங்ங்னம் நிகழப் பெற்றோர் யோகநிலைக்கண் நிற்பர். இந் நிலை யில் விசேட திக்கை மந்த சத்தி நிபாதர்க்கு உரியதாய்க் கிரியையைத் தந்து பின்னர் அதுவழியாகத் தீவிர சத்தி நிபாதத்தை உண்டாச்கும். இந் நிலையில் யோகத்தைத் தரும். யோகத் திற்கு விசேடத்தில் விசேடமாக வேறு தீக்கை செய்யும் முறையும் சில இடங்களில் உண்டு. விசேட தீக்கை பெற்றுக் கிரியா பாதத்தில் நிற்போர் புத்திரர்’ என்று வழங்கப்பெறுவர். யோகத்தில்)நிற்போர் யோகியர்' என்னும் பெயரை அடைவர். கிருவான தீக்கை: மேற்குறிப்பிட்ட இரண்டு தீக்கை களால் சரியை, கிரியை, யோகம் என்னும் தவம் முழுவதும் கைவரப்பெறுவதால் இத் இக்கை ஞானத்திற்கே உரிய