பக்கம்:சைவமும் தமிழும்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதன இயல் 32 i ஆசாரியன் மூலமாகத் தான் நிர்வாண தீக்கையின்றி ஞானம் உண்டாகமாட்டதா? என்று வினவியிருந்தாய். கூறுவேன்; ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங் களுள் ஆணவத்தை மட்டும் உடையவர் விஞ்ஞான கலர் என்றும், ஆணவம் கன்மம் என்ற இருமலத்தையுடையவர் பிரளயாகலர் என்றும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் உடையவர் சகலர் என்றும் உயிர்கள் மூவகைப்படும் என்பதை முன்னர்' குறிப்பிட்டேன் அன்றோ? அதனை ஈண்டு நினைவுகூர்க. மும்மலம் உடைய சகலர்க்கு ஆசாரியன் அருள் இன்றி (நிர்வாண தீக்கையில்லாமல்) ஞானம் உண்டாகமாட்டாது என்பது சிவாகமங்களின் தீர்ப்பு ஆகும். இவர்கட்கு ஆணவமல மறைப்பு மிககும் வன்மையாக இருக்கும். அதனால் இறைவன் ஆசாரியள் வாயிலாகச் செய்யும் பை வகைக் கிரியைகளால் அகற்றுவான். இம்மலம் நீங்கிய பின்பு ஞானத்தைச் சில சொற்களால் முதற்கண் அறி வுறுத்துவான். இங்ங்ணம் அறிவுறுத்தப் பெற்ற பொருளை நூல்களோடு வைத்து சிந்திக்கச் செய்வான். இங்ங்னம் சிந்திக்கும்போது எழும் ஐயங்களை உடன்கண் இருந்து அவ்வப்பொழுது தெளிவிழ்பூதன். தெளிவித்தபின்பும் அந் நிலையில் நிற்கும் நிலையில் முறைமை எல்லாம் காட்டி நிற்பிப்பான். இப்பொழுது இவர்கட்கு ஞானம் தோன்றும். ஆசாரியன் செயலெல்லாம் அவரிடம் ஆவேசித்து நின்று செய்யும் இறைவனது செயலாகும். இதனால் தீக்கை என்பது, சிவபெருமானின் கிரியாசக்தியின்தொழிபாடாகும் என்று கருதவேண்டும். சகலர் பொருட்டு ஆசாரியன்மூலம் இறைவன் நின்று செய்யும் இத் தீக்கை சாதார தீக்கை எனப்படும். சாதாரம்-ஆதாரத்தோடு கூடியது என்பது பொருள். இக் கூறியவற்றால் சகலர்க்கு ஆசாரியன் செம் யும் நிர்வாண தீக்கையினால்தான் ஞானம் உண்டா 45. இயல் -3; கடிதம் 23, பக்(168-179) சை. ச. வி.--21