பக்கம்:சைவமும் தமிழும்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவனியல் 329 சாந்தம் அல்லது அமைதி பெற உண்மையான வீடு நோக்கி வருகின்றது. நாம் காலையில் அலுவல்கள் நிமித்தப் வெளியில் சென்று மாலையில் களைத்துப்போய் வீடு நோக்கித் திரும்புகின்றோம் அல்லவா? அதுபோலவே ஆன்மா இவ்வுடலை ஊர்தியாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய அந்தமில் இன்பத்து அழிவில் விட்டை அடைய முயல்கின்றது. இந்த வீடு அமைதி யானது; எல்லையில்லாத பேரின்பம் அளிப்பது. ஆகவே எதிர் மறையான மலம் நீங்குதலை நோக்கமாகக் கருதாது பேரின்பமடைந்து எப்பொழுதும் அந்நிலையில் நீடிப்ப தையே நோக்கமாகக் கொள்ளுகின்றது. சித்தாந்தம்' அதன் பின்னர் அந்நிலையினின்றும் மாறுவதே இல்லை. சிவலோகத்தை அடைதலையே குறிக்கோளாகக் கருது கின்றான் சித்தாந்தி. உள்ள மலநீக்கி யோங்கு சிவானந்த வெள்ளக் திளைத்ததுவாய் மேவுதலே-கள்ளவிழ்பூங் கொத்தார் விரிசடையத் கூறு சிவாகமத்தில் சித்தாந்த முத்தியெனத் தேறு: என்கின்றார் தருமையாதீனத்தை நிறுவிய குருஞான சம்பந்தர். இம் முத்திப் பேற்றினைப் பெறுவதே சித்தாந்த ஞானத்தின் பயன் என்பதேயாகும். அதாவது, சித்தாந்த முத்தி சிவத்தோடு அத்துவிதமாய்க் கலந்து, ஆன்மா சிவனது இன்பத்தில் திளைத்திருத்தலே யாகும் என்பதை உணர்ந்து தெளிக், தாயுமான வரும் இந்த முத்திலையைச் சுத்தாத்துவித முத்தி நிலை என்பர். அறிவிற் கறிவு தாரகம்’ என் றறிந்தே அறிவோ டறியாமை நெறியிற் புகுதா தோர் படித்தாய் கின்ற கிலையும் தெரியாது 7. முத்தி நிச்சயம்-25