பக்கம்:சைவமும் தமிழும்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 33% சூரிய ஒளியில் விண்மீன்களின் ஒளி தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று சொல்ல முடியா தல்லவா? அதைப் போலவே இறையதுபவத்தில் ஆன்மா வின் பிரித்தறிய முடியாத இயல்பு அஃது அழிந்துவிட்ட தாகி விடாது. இந்த நிலையில் ஆன்மாவிற்கு இழப்பில்லை: ஆனால் அப்போது தெய்விக அமைப்பில் அஃது ஆழ்ந்துவிடு கின்றது என்று சொல்வி வைக்கலாம். இவ்வுலக வாழ்வில் ஆன்மா ஆணவத்துடன் கூடி புள்ளது என்பதை நீ அறிவாய். ஆனால், அந்த உறவால் 'உறவு கொண்டவற்றுள் ஒன்றும் அழிவதில்லை. அதைப் போன்றே முத்தியிலும் ஆன்மாவும் இறைவனும் நெருங்கிக் கூடியுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவருக்கும் இழப்பில்லை. அவர் தம் தனி இயல்புமிகு மதிப்பும் மாறாமல் அப்படியே உள்ளனர். இதைச் சித்தாந்திகள் 'பசு பாசத்தில் அழுந்தி நிற்கும் நிலை பெத்தம்; அது பதியில் அழுத்தி நிற்கும் நிலையே முத்தி என்று விளக்குவர். இந்த அத்துவிதக் கலப்புக்குத் தமிழில் தாள் தலை என்ற இரு சொற்களின் புணர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்வது மரபு. - தலை ஆன்மாவையும் தான் இறைவனையும் குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும். அதாவது இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பெர்ருந்து கின்றது என்பதே இதன் கருத்தாகும். தாளும் தலையும் தமிழ் இலக்கணவிதிப்படிப் புணரும்போது'தாடலை ஆகும். தாள்’ என்பதில் உள்ள ள மறைய, தலை"யிலுள்ள "த’, ‘ட’ ஆக மாறித் தாடலை ஆகின்றது. இதனை இரு சொற்கள் எனக் கொள்ளவும் முடியாது; ஒரு சொல்லெனக் கொள்ளவும் முடியாது. ஒரு விதத்தில் இஃது ஒரு சொல்: இன்னொரு விதத்தில் இரு சொல். இதைப் போன்றதே இறைவனோடு ஆன்மா ஐக்கியப்படும் விதமும் என்பதே சித்தாந்தத்தின் முடிவாகும். -