பக்கம்:சைவமும் தமிழும்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ4 கலையுட்பட்ட புவனங்களில் காலோகம் முதலியவற்றைப் பெறுவர். இவ்வுலகங்கள் அனைத்திற்கும் தடத்த சிவனாகிய சிவபெருமானே முதல்வனாதலை ஏற்கெனவே விளக்கியுள்ளேன். அதனை ஈண்டு நினைவுகூர்க. நிட்டையில் மீளாது திற்கும் நிலையுடையோரே ஞானத்துள் ஞானமாகிய அதனுள்ளும் முடிவாகிய ஞானத் தைப்பெற்றோராவர். இவரே சொரூப சிவனாகிய பரம சிவனோடு இரண்டறக் கலக்கும் பரமுத்தியை ஆடைவர் என்பதை அறிந்து தெளிக, மேற்கூறிய பல்வேறு முத்தி நிலைகளை அடைந் தோரின் தன்மைகளையும் தெளிவிப்பேன். ஞானத்துள் ஞானமாகிய நிட்டை நிலையை எய்தினோர் அதனுள் திற்க மாட்டாதவராயவழியும் மேற்கூறிய அபரமுத் தியைப் பெற்று அங்கு நின்றே பரமுத்தியைப் பெறுவர் இவர்க்கு மீட்சி இல்லை. ஏனைய கேட்டல் முதலிய மூன்றினும் நின்று அபரமுத்தியைப் பெற்றோர் மீளுதல் சிறுபான்மை. இவர் மீண்டவழி தீவிரயத்தி அதிதீவிர பத்திகளை உடையவர்களாய் நின்று ஆசான் மூர்த்தியை வேண்டாது இப்பிறவியிலேயே பரமசிவன் நேர்படப் பெற்றும் பெறாதும் அவனோடு இரண்டறக் கலத்தலாகிய பரமுத்தியைப் பெறுவர். இங்ங்ணம் பெறும்வழித் தாம் செய்த தீவிரபத்தி அதிதீவிரபத்திச் செயலின் பயனை மேற்கூறிய அபரமுத்தி உலகங்களிற் சென்று துகர்த்து ஏற்றபெற்றியான் மெல்லவும் விரையவும் பரமுத்தியை அடைவர். அறுபரன்மும்மை நாயன்மார் இத்திறத்தினரே என்பது அவர்தம் வரலாறுகள் நோக்கி அறிந்து கொள்க. இவர்கள் ஞானத்தைப்பெற்று மீண்ட அபரமுத்தர் என்பது ஆசான் மூர்த்தியின்றியே சிவஞானமும் சிவபத்தியும் மிக்க உடையராயினமையால் விளங்குதல் தெளிவாகும். பதமூத்தியை அடைந்தோர் அவ்விடத்தே இரு வினையொப்பு முதிரப்பெற்று ஞானத்தை அடைந்து அங்கு நின்றே அபரமுத்தி பரமுத்திகளையடைதல் சிறு