பக்கம்:சைவமும் தமிழும்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36趙 சைவ சமய விளக்கு சிவம் தானும், தன்சத்தியும் என இரு கூறுபட்டு நிந்தலால் முதற்கண் சத்தியை அறிந்தே பின் சிவத்தை அறியும் நிலை உண்டாகும். இவற்றுள் சத்தியைத் தெளி வாக அறியும் நிலையே சிவயோகம் எனப்படும்:சிவத்தைத் தெளிவாக அறியும் நிலையே சிவயோகம் என்றும் நுவலப் படும்.” மேலே தசகாரியத்தைப்பற்றிக் குறிப்பாகக் கூறின தைச் சிறிது விளக்குவேன். சத்தி திபா தத்து உத்தமனா கிய மாணாக்கனுக்கு ஞான உபதேசம் செய்து வரம்பில் இன்பத்தில் என்றும் ஒரு நிலையாய் இருத்தற்குரியதை விளக்குவார் ஞானாசிரியர், ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்த விட்டு அன்னிய மின்ன்ையின் அரண்கழல் செலுமே." என்பது சிவஞான போதம், இதில் விட்டு என்றும் செல்லும்’ என்றும் மெய்கண்டார் கூறும் இருசெயல் களே தசகாரியம்’ எனப்படும் பத்துச் செயல்களாக விரிவு படுகின்றன. இவற்றுள் விடுதல் பாசக் கூட்டத்தையும், பக போதத்தையுமாகும்; செல்லுதல் சிவத்தினிடத்தி 〔。 . . இவண் கூறிய உபதேசத்தைப் பெற்றோர் அனைவர்க் கும் விடுதலும், செல்லுதலும் ஒருவகையாகவே நிகழ்தல் இல்லை; அவரவரது தன்மைக்கேற்ப மெல்லவும் விரைய வும் நிகழும். ஆகவே, உபதேசத்தைக் கேட்ட பின்னர்ச் சிந்தித்தவிலும் தெளிதலிலும் சிலர்க்குச் சிலகாலம் கழியும், அதன் பின்பு நிட்டை கூடிய வழியும் அந்நிட்டை 51. ಜಿಲ್ಲ.7ಷಕ್ಕಿ என்பதற்கு ஒன்றுதல் என்பதும், போகம் என்பதற்குத் துய்த்தல்' என்பதும் சொற்பொருள்க ளாகும். . 52. சி. ஞா. போ. சூத், 8.