பக்கம்:சைவமும் தமிழும்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಟಟಣಗಿuಸಿ 365 என மயங்கி மலையவேண்டா. ஆசாரியப் பெரு மக்கள் அவரவர் மனம் அறிந்த அநுபவத்தை இவ்வாறு பல வகை யாகக் கூறினாலும் அநுபவம் ஒன்றே யாதல் என்பதை ஒர்ந்து தெளிக. அன்பன், கார்த்திகேயன். 47 அன்பு நிறைந்த கண்ணுத லப்பனுக்கு, நலன், நலனே விளைக. முன்னொரு கடிதத்தில் " அவத்தைகளைப்பற்றி விளக்கினேன். அவற்றை மீண்டும் ஒரு முறை உளத் தில் நிறுத்தி இக்கடிதத்தில் கூறும் பொருள்களை ஆய்ந்து உளங் கொள்ளல் வேண்டும், சாக்கிரம் முதலிய ஐந்தவத்தை களும் பேத்தத்தில் கேவல சகலங்களில் நிகழும் என்பதை நீ நன்கு அறிவாய். அவை சுத்தத்திலும் நிகழும் என்பதை ஈண்டு விளக்குவேன். c தத்துவமும், தாவது விகமும் ஆகிய கருவிகள் கூடுதல் பிரிதல்களினாற்றான் சாக்கிரம் முதலிய அவத்தை வேறு பாடுகள் நிகழ்கின்றன; இவை அங்கனம் கூடியும் பிரிந்தும் வருமிடத்துப் பிரிந்து நிற்கின்ற நிலையில் உயிருக்கு அறி யாமை மேலிடுகின்றது; அப்போது உயிர் அதன்கண் அழுந்து கின்றது. இதுவே சகல ஐந்தவத்தை என்பதை நீ நன்கு அறிவாய். இங்ங்ணம் கருவிகள் குறையக் குறைய உயிருக்கு அறியாமையாதல், புலனுணர்வாதல் உளவாதல் இல்லை. சிவாதுபம் உளவாதலே சுத்த ஐந்தவத்தைகளாகும். ஆகவே, இவையும் மேற் குறிப்பிட்ட தசகாரிய நிலைகளில் ஆமைவனவாகும். இவை அமையுமாறு எங்ங்ணம் என்ப م------ س -----ہ:مp* مجھ مrtu* @–; 45ಟಿ-2ತಿ; ಬà (161–86)