பக்கம்:சைவமும் தமிழும்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3宵露 இசவ சமய விளக்கு ‘இனி இவ்வான்மாக்களுக்குத் தமது முதல்தாலே குருவுமாய் உணர்த்தும் என்றது. அவன் அன்னிய மின்றிச் சைதன்ய சொரூபியாய் நிற்றலான்'. என்ற மெய்கண்டார்ன் திருவாக்கையும், ஞானயோ கக்கிரியா சரியை நான்கும் காதன்றன் பணி;ஞானி காலினுக்கும் 4 5لتfiسعة... هم.... مم. مم. هه.... ஆதலினால் யார்க்கும் ஈனமிலா ஞானகுருவே குருவும் இவனே." என்ற அருணந்தி தேவ நாயனாரின் அமுதமொழியையும் கண்டு தெளிக. - மேற் கூறியவற்றால் மெய்கண்ட தேவர் முதலிய உபதேச பரம்பரை ஆசிரியர்கள் சாக்கிரத்தில் அதீத நிலை யில் நின்றே ஞானகுரவராய் விளங்கித் தம்மை அடைந்த பக்குவர்களுக்கு உண்மை ஞானத்தை வழங்கினர் என்பது அறிக. அவ்வாசிரியர்பால் உபதேசம் பெற்ற மாணாக்கர் கட்கு உண்மை ஞானம் கைவந்தமை அருணத்திதேவர் தம் போதம் நீங்கி மெய்கண்ட தேவரையே சிவமாகக் காணும் நிலையை எய்தினார் என்ற வரலாறும் உமாபதி தேவரால் பெத்தான் சாம்டாலும் முள்ளிச் செடியும் முத்தி பெற்ற வரலாறுகளும் பரக்கப் பேசுகின்றன. தாயு மான அடிகளும் மெளன குருவையே சிவமாகக் கோண் டார் என்பதைச் சிந்திக்க இடந்தருகின்றது. வானகமும் மண்ணகமும் வந்தெதிர் விளங்கிடும்உன் மகிமையது சொல்லவெளிதோ.: என்பனபோன்ற கூற்றுகள் இதற்குத் துணையாக அம்ை கின்றன. 64. சி. ஞா. போ. அதி' 2. 85. சித்தியார்-2, 5 86. பா. மெளனகுரு வணக்கம.7