33 சைவ சமய விளக்கு இருளையே தன்னுள் காண்கின்றான். ஆயினும், மனத்தை உன் முகத்தில் வைத்திருக்கப் பழக வேண்டும் (இதுவே. தியானம் என்பது). இப் பழக்கம் உறுதிப்பெற நெடுங்காலம் ஆகும். பழகுபவனுக்கு ஒர் அற்புதமான அநுபமுவம் கிட்டும்.தனது உள்ளத்தினுள்ளே ஒருவித இனிய ஓசை யைக் கேட்பான்; புகை போன்றும், மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் போன்றும் சில காட்சிகள் தன்னுள் தென் படுவதைக் காண்பான். ஒலி ஒளி ஆகிய இரண்டும் மனத்தில் உதிப்பது சாதகன் தன் சாதனையில் முன்னேறி வருவதன் அறிகுறியாகும். இறுதியில் மனத்தின் அஞ்ஞானத் திரை நீங்குவதை அறிகின்றான். ஞான ஒளியின் தரிசனம் கிட்டு வதை உணருகின்றான். அந்த ஞான ஒளியும் ஆன்ம சொரு பமும் ஒன்றேயாகும். இங்ங்ணம் மனத்தகத்து உண்டாகின்ற ஆன்ம தரிசனத்துக்குப்புறச் சின்னமாக அமைந்திருப்பதே இந்த ஆலய தரிசனம். மாந்தருக்குத் தகுந்தவாறு அதை மாற்றியமைப்பதற்கு ஆகம சாத்திரம் இடம் தருவ தில்லை. வேண்டுமானால் நம் விருப்பப்படி மாற்றி யமைத்துக் கொள்ளலாம். ஆனால் அஃது ஆத்ம தரிசனத் தின் புறச்சின்னமாகாது. ஆலயன வழிபாட்டிற்குச் செல்லும் பக்தனின் மனப் பான்மை எப்படியிருக்க வேண்டும் என்பதைப்பற்றிச் சில சொற்கள், மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன் ஆலயத்திற்குள் போக வேண்டும் என்பது கோட்பாடு: ஆலயத்திற்குள் நுழையும்பொழுதே உலக விவகாரங்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். இறை வனைப்பற்றிய சிந்தனையே சித்தமிசை குடி கொண் டிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பதைபதைப் புக்கோ வேகம் நிறைந்த நடமாட்டத்திற்கோ ஆங்கு இடம் இல்லை. அமைதியும் சாந்தமும் வடிவெடுத்த வனாக வழிபடுபவன் ஆய்விடுகின்றான். திருக்கோயிலுக் குள் கூச்சலிட்டுப் பேசுவோர் வழிபடுபவர் ஆகார். இவர்கள் திருக்கோயிலின் புனிதத் தன்மையினையும் ஒரு
பக்கம்:சைவமும் தமிழும்.pdf/420
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை