பக்கம்:சைவமும் தமிழும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 23 தில்லை வாழ் அந்தணர்கள் இவருடன் கருத்து மாறுபட்டு இவரை வெறுத்தொதுக்கியிருந்தனர். இதன் காரணமாக ஒரு சமயம் கொடி ஏறாதிருந்தது. பின் அசரீரி சொல்லிய படி இதன் ஆசிரியரை அழைத்து வந்து கொடி ஏற்றுமாறு வேண்டினர். ஆசிரியர் அக்கொடிதானே ஏறும்படி ஐந்து திருப்பாடல்களைப் பாடியருளினார். முதற் பாடல் கட்டளைக் கலித்துறை; ஏனைய நான்கும் வெண்பாக்கள். இந்நூலில் சித்தாந்தத்தின் மிக நுண்ணிய பொருள்களும், திருவைத்தெழுத்தின் மறைபொருள்களும் நுவலப் பெறு கின்றன. நெஞ்சு விடு தூது (12) என்ற இந்நூல் ஆசிரியர் தம்மைத் தலைவியாகவும், தம் குருநாதர் மறைஞான சம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடப்பெற்றது. ஆசிரியர் குருநாதரைக் காமுற்று வருந்தி அவர்பால் சென்று அவரது கொன்றை மாலையை வாங்கி வருமாறு தம் நெஞ்சைத் துTதாகவிட்டதுபோல் செய்யப்பெற்ற தூதுப் பிரபந்தமாகும். இதில் தத்துவங்கள், உபதேசங் கள், புறச் சமய மறுப்புகள் முதலியன உள்ளன. சிறப் பாகத் தசாங்கங்கள் பேசப்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. 129 கண்ணிகளைக்கொண்ட கலிவெண்பாவால் ஆனது இந்நூல். உண்மை நெறி விளக்கம் (13) என்பது, இதன் ஆசிரியர் தம் ஞானாசிரியரிடம் உபதேசம் பெற்ற பின்னர் அதைச் சிந்தித்துத் தெளிந்து நிட்டைகூடும் செயலில் உள்ள பத்து நிலைகளாகிய தசகாரியங்களை மிகவும் சுருக்கமாகக் கூறும் நூல். இஃது ஆறே திருவிருத்தங்களால் ஆனது. இதனைத் தத்துவ நாதர் என்ற வேறோர் ஆசிரியர் இயற்றியதாக வெண்பா ஒன்று உண்டு. எனினும், உமாபதி சிவம் செய்த தாகவே பெரும்பாலோர் கொள்ளுகின்றனர். இதனைத் துகளறு போதத்தின் சுருக்கமாகக் கொள்வதும் உண்டு. சங்கற்ப கிராகரணம் (14) என்பது பதினான்கனுள் இறுதி நூலாகும். இது சிவஞான சித்தியாரின் பரபக்கம்