பக்கம்:சைவமும் தமிழும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . சவ சமய விளக்கு இலம்இ லான்மைந்தர் மனைவி.இல் லான்னவன்? அவன் சஞ் சலம்இ லான்,முத்தி தரும்பர சிவன் எனத் தகுமே." என்று தாயுமான அடிகள் சிவன் எனத் தகுவோன்’ என்று கூறும் பாடலில் பதியின் இலக்கணம் அமைந்திருப்ப தாகக் கருதலாம். சைவாகமங்கள் அளவை முறையில் எடுத்துக் காட்டும் சிறப்பியல்புகள் எண் குணங்களாகும். அவை: தன் வயம், துயஉடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாச நீக்கம், முடிவில், ஆற்றல், பேரருள்,உடைமை, வரம் பிவின்பம் உடைன்மி என்பனவாகும்". இவையே வட மொழியில் சுதந்திரம், விசுத்த தேகம், அனாதி போதம் கருவிஞ்ஞதை, நிராமயம், அனந்த சத்தி, அலுத்த சக்சி. திருப்தி என்று நுவலப்பெறும். மேற்கூறிய எட்டில் தூய உடம்பு, பாசங்களின் நீக்கம் இவையின்றியாயினும் இயற்கை உணர்வை முற்றும் உணர்தலாலும், தாய உடம்பைப் பாசங்களின் நீங்குதலிலும் அடக்கியாயினும் ஆறாகக் கூறும் மரபும் உண்டு. இன்ன சிறப்பியல்புகள் நோக்கிச் சொல்லப்படும் இடத்தில் சிவம் பரசிவம்’ என்று வழங்கப்பெறும். தாயுமான அடிகளின் பரசிவ வணக்கம் காண்க. முதற் பாடலில் சிவத்தின் சொரூப இயல்பு நுவலப் பெற்றிருப்பதைக் கண்டு தெளிக. அடுத்து, பதியின் தடத்த இலக்கணத்தை விளக்கு வேன். இது குணங்குறிகளோடு கூடிய நிலை. தன்னையே நோக்கி நிற்கும் பரசிவம் அந்நிலையி னின்றும் நீங்கி 24. தா. பா. ஆசையெனும்-30. 25. குறள்-9 இல் 'எண்குணத்தான்' என்பதற்கு இவற்றையே காட்டுவர் பரிமேலழகர். 28, அங்கிங்கெனாதபடி'- (1)