108
சைவ இலக்கிய வரலாறு
அவ்வூர்க் கல்வெட்டுக்கள், அத் திருப்பாட்டிற் காணப்படும் தம்பரிசு', அம்பெரிய என்ற தொடர்களால் இறைவனைத் தம்பரிசு உடைய நாயனார் ” என்றும் அம்பெரிந்த பெருமான்' என்றும் பெயர் குறித்து, அவளிவணல்லூர் உடையார் தம் பரிசுடைய நாயனார் கோயிலில் எழுந்தளுகிற...... அம்பெரிந்த பெருமானயும் நாச்சியாரையும்... எழுந்தருளுவித்தான்...... சாத்தன் உடையான் தம்பரிசு உடையான் ஆதிச்ச தேவனான அமரகோன்[1]' என்று கூறுகின்றன. அச் சிறுபாக்கத்துத் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர் இறைவனை அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே[2] " என்றதனால், கல்வெட்டுக்கள், அச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சி கொண்ட நாயனார்[3] ' என்று குறிக்கலுற்றன. இவ்வண்ணமே, குரங்கனின் முட்டத்து இறைவனைக் கொய்யா மலர் சூடுவார்[4]' எனவும், திருப்புறம் பயத்து இறைவன் கோயிலிலுள்ள தென்முகக்கடவுளை அறமுரைத்த நாயனார்[5] எனவும் பிறவும் கல்வெட்டுக்கள் கூறுவது, ஆங்காங்கு ஞானசம்பந்தர்பாடிய திருப்பதிகங்களைக் கண்டு மேற்கொண்டனவாகும்.
திருஞானசம்பந்தர், ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில், இறைவியைக் குறித்துரைத்துப் பாடிய சொற்றொடர்களையே பெரும்பாலும் அவ்வவ்வூர்க் கல் வெட்டுக்கள் எடுத்தோதியுள்ளன. திருவெண்காட்டுத் திருப்பதிகத்தில் இறைவியை "வேயன தோளுமை'[6] என்றாராகக் கல்வெட்டு, "வேயன தோளி நாச்சியார்[7] எனவும், திருவோத்துார்த் திருப்பதிகம் இடையீர் போகா இளமுலையாள்[8]' என்றதாகக் கல்வெட்டு இளமுலை நாச்சி[9] யெனவும், அச்சிறுபாக்கத்துப் பதிகம், இளங்கிளையரிவை[10]' என்றதாகக் கல்வெட்டு