இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
424
சைவ இலக்கிய வரலாறு
அறிஞர் பலரும் இருவரையும் வேறு வேறாகவே கொள்கின்றனர். தனிப் பாடல்களாகக் காணப்படுவனவற்றுள் மிகப் பல ஒளவையாரது நல்லிசைப் புலமைக்கு ஊறு செய்யும் இயல்பினவாய் உண்மையறிவுக்குப் பொருந்தாது மாறுபடுவனவாம். அதனால் அவை ஈண்டுக் காட்டப்படவில்லை. வேண்டுவோர் ஒளவையார் சரித்திரம், பன்னிரு புலவர் சரித்திரம் பாவலர் சரித்திர தீபகம் முதலிய நூல்களிற் கண்டு கொள்க.