பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு

11

சைவ சமயத்தின் அடிப்படை அன்பேயரகும். அவ்வன்பைத் தாங்காது, சிவ சின்னங்களை மட்டுந் தாங்கி, உயிர்களுக்குத் தீங்கு நினைப்பவர் சைவராகார். 'எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்' என்னுங் கொள்கையில் தலைகிறந்து விளங்கும் மக்கள், எத்தேசத்தவர்களாயினும், எக்குலத்தவர்களாயினும், எச்சமயத்தவர்களாயினும், எவ்வேடத்தவர்களாயினும் அலானைவரும் - சைவரேயாவர். சுருங்கக்கூறின் அன்புநெறி நிற்போர் அனைவருஞ் சைவரேயாவர் என்னலாம்.

வழிபாடு

சைவ சமயத்தில் இருவித வழிபாடுகள் வகுக் கப்பட்டிருக்கின்றன. ஒன்று ஆலய வழிபாடு; மற்றொன்று உயிர் வழிபாடு. ஆலயமும் உயி ரும் முறையே படமாடுங்கோயில் நடமாடுங் கோயில் எனப்படும். இவ்விரண்டனுள் நடமாடுங் கோயில் வழிபாடே சிறப்புடையது என்று சைல சமய நூல்கள் கூறுகின்றன.

படமாடக் கோயில் பகவற் கொன்றீயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின்
படமாடக் கோயில் பகவற்கங்காமே–திருமந்திரம்

எவ்வுயிரும் நீங்கா துறையும் இறைசிவனென்று
எவ்வுயிர்க்கும் அன்பா யிரு–சைவசமயநெறி