பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம். இதுகாறும் கூறியவற்றால் பதியாகிய இறைவனையும் பசுக்களாகிய உயிர்களையும் அவர்களின் தன்னியல்பு சொரூப இலக்கணம் பற்றிப் பிரித்தறிந்து கொள்ளலாமேயன்றி அவர்தம் பொது இயல்பு தடத்த இலக்கணம்) பற்றி அறிந்து கொள்ளுதல் அரிதாகும். பதிபசு இவற்றின் தன்னியல்புகளுள் (Essential nature) எல்லாராலும் எளிதில் அறியத்தக்கனவாக உள்ளவை இவை பதி இயல்பாகவே பாசத்துட்படாது தூய்மை யாக நிற்கும். பசு இயல்பாகவே பாசத்துட்பட்டு மாசுபட்டு நிற்கும். பாசம் இல்லையேல் பிறப்பு இல்லை; பாசம் உண்டேல் பிறப்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆகவே எங்காயினும் எவ்வாறாயினும் பிறப்பினை உறுவது உயிர் என்றும், பிறப்பில்லாதது கடவுள் என்றும் நாம் உணர்ந்து தெளிதல் வேண்டும். அங்ங்னம் நாம் உணர்ந்தால் 'சிவபெருமான் ஒருவனே கடவுள் என்பதையும், ஏனைய எல்லோரும் உயிரினத்தவர் என்பதையும் நாம் தெளிகின் றோம். ஆதலின் சிவபெருமானே முதற்கடவுள் ஏனையோர் முதற்கடவுள் அல்லர் என்று வரையறுத்துக் கூறுவோர் பதியின் பிறப்பின்மையையுமாகிய அவர்களின் தன்னியல்பு பற்றிக் கூறுகின்றனரேயன்றி, சிவன், மால், அயன், இந்திரன் இவர்தம் பெயர்கள், வடிவு, தொழில் ஆகிய பொது இயல்பு பற்றிக் கூறுகின்றார் அல்லர் என்பதை அறிகின்றோம். எனவே, பலகோடியினராகிய தேவர்கள், உருத்திரர்கள், சிவர் கள் முதலிய அனைவர்தம் இயல்புகளை யாவர்க்கும் முன்னோனும் முதல்வனுமாகிய பரமசிவனது இயல்பினையும் ஐயம் திரியின்றித் தெளியலாம். சிவக் கூறுபற்றிக் கூறிவந்த இவையெல்லாம் சக்திக் கூறாய் நிற்கும் தேவியர் அனைவர்க்கும் பொருந்துதலையும் சிந்தித்து உணரலாம்.