பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#12 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அசத்து என்பது தானே விளங்கும். இதில் அசத்து' என்ப்தற்கு நிலையாமை என்பது பொருளாகின்றது. ஆகவே, வள்ளுவப் பெருந்தகையும் நிலையாமை" என்னும் அதிகாரத்தில் உலகம் அசத்தாதலையே விளக்கினார் என்பது அறியப்படும். நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை." என்னும் குறளில் அசத்தைச் சத்து என்று கருதி மயங்கும் மயக்கமே அஞ்ஞானம்' என்று கூறப்பெற்றதை உய்த்துணர லாம். சத்து’ என்ற சொல் உள்ளது என்றே பொருட்பட்டு வேறு பொருள்படாமையின், எல்லாப் பொருளையும் உள் பொருளாகக் கொள்வார்க்கு அசத்து என்பதே இல்லாததாய் முடியும் என்பாரை நோக்கி, உண்டுபோல் இல்லாப் பண்பின் உலகினை அசத்தும் என்பர்" என்று அருணந்தி சிவாச்சாரியார் கூறுவதையும் அறியலாம். அஃதாவது எல்லாப் பொருளும் உள்ளனவே யாயினும், சில பொருள்கள் முன் உள்ளன போல் காணப்பட்டுப் பின் இல்லனவாய் ஒழிதல்பற்றி அவற்றை அசத்து என்றும் கூறுவர் உயர்ந்தோர் என்பது இதன் கருத்தாதல் அறியப்படும். 'அசத் தானது நிலையில்லாதது என்பதால் சத்தானது நிலை பேறுடை யது என்பது தானே விளக்க மாகின்றது. மெய்யானது நிலை பேறுடையது என்று மேலே கூறியதனாலேயே 'பொய்யாவது நிலையில்லாதது என்பதும் இனிது விளங்குகின்றதன்றோ? 103. அதி. 34 104. குறள் , 331 105. சித்தியார்