பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்: 1 (பதி) | 17 துயஉடம்புடைமை இடது வடமொழியில் ‘விசுத்த தேகம்’ என்று வழங்கப்பெறும். இறைவன் தன் வயத்தால் செய்யும் செயல்கள் யாவற்றையும் உடம்பின்றியே செய்யக் கூடுமாயினும், பிறர் பொருட்டுச் சிலவற்றை உடம்பொடு செய்ய வேண்டியவனாகின்றான். எனவே, தூய உடம்புடையவ னாதல் அடுத்து வேண்டப்படுவதாகின்றது. உடம்புடையவ னாக நிற்பது பொதுவியல்பாயினும், அந்த உடம்பு,உயிர்களின் உடம்பின் வேறாதல் போல் அவனின் வேறாதலின்றி ஒன்றே யாகும் என்பது கருத்தாதலின் உண்மை இயல்பாயிற்று. இயற்கை உணர்வினனாதல்; இதனை வடமொழி யாளர் அநாதி போதம் என வழங்குவர். தன் வயத்தனாயும் தூய உடம்பினனாயும் நிற்கும் இறைவனுக்கு பிறபொருளால் வரும் அறிவு செயற்கையாதல் சிறிதும் பொருந்தாது. அரசர் முத்லிய தலைவர்கட்கு ஐம்பொறிகள் மனம் முதலிய அந்தக் காரணங்களாலும், தாய் தந்தையர், ஆசிரியர் முதலாயினோ ராலும் அறிவு செயற்கையாக நிகழ்தல் கண்கூடு. இதனால் அவரெல்லாம் உண்மைத் தலைவராகாராயினர். இறைவனது அறிவு அவ்வாறின்றித் தானே விளங்குதலால் அவன் ஒருவனே. - உண்மைத் தலைவனாகின்றான். என்பதைத் தெளியலாம். இந்த இயற்கையறிவு சுயம்பிரகாசம் எனவும் வழங்கப்ப்டும். பிறபொருள் விளக்க விளங்கும் அறிவு பரப்பிரகாசமாகும்; அது சுதந்திரத்திற்கு இழுக்கும் ஆகும். இதனால் அரசர்கள் சூழ்வார் கண்ணாக (குறள் 455) ஒழுக வேண்டியுள்ளது. இறைவனோ அனைத்தையும் தன் சங்கற்பத் தினாலேயே செய்கின்றான். ஆகவே, இயற்கை உணர்வின னாக இறைவன் செயற்படுகின்றான் என்பதை உளங்கொள் ளல் வேண்டும். முற்றும் உணர்தல்: வடமொழியாளர் இதனைச் ‘சர்வஞ்ஞதை என்பர். எனவே இது சர்வஞ்ளுத்துவம்