பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) 147 (4) உயிர்பற்றிய சித்தாந்தக் கருத்து உயிர் எல்லையற்று நிற்கும் வியாபகப் பொருளே, ஆயினும் அது இறைவனது வியாபகத்தில் அடங்கி நிற்ப தாகும். அதாவது பிற இயல்புகளிற்போலப் பரிமாணத்திலும் இடைப்பட்ட நிலையையுடையது. எனவே, உயிர் பாசத்தை நோக்க வியாபகமாயும் பதியை நோக்க வியாப்பியமாயும் நிற்பது உயிர் அல்லது ஆன்மா. ஆன்மா என்பதற்கே வியாபகம்’ என்பதே பொருளாகும். ஆன்மா இங்ங்னம் எங்குமாய் நிற்கும் வியாபகப் பொருளாயினும், அவ்வியாபகத் தைத் தோன்றவொட்டாது மறைத்து நிற்கின்றது பாசம். அதனால் உயிரும் அனுப்போலத் தோன்றுகின்றது. வியாபகம் மகத்து என்றும், ஏகதேசம் அணு என்றும் சொல்லப்படும். எனவே இயற்கையில் மகத்தாய் உள்ள உயிரை அணுத் தன்மை அடையச் செய்தது பாசமே. அணுத் தன்மையைத் தருதல் பற்றியே பாசத்திற்கு ஆணவம் என்ற காரணப்பெயர் உண்டாயிற்று என்பதும் அறியப்படும். இந்தப் பாசம் நீங்கினால் உயிர் அணுத்தன்மை நீங்கி மகத்தாகவே நிற்கும்’ என்பதும் உளங்கொள்ளத்தக்கது. ஆன்மாவின் இயல்பைத் தோன்றவொட்டாது பாசம் மறைத்து நிற்றல் நீரின் இயல்பைத் தோன்றவொட்டாது பாசி மறைத்து நிற்றல் போல்வது என்று விளக்கி வைக்கலாம். எனவே, பாசியை விலக்கினால் விலக்கிய அளவிற்கு நீர் தோன்றுதல் போல் மாயையின் காரியமாகிய உடல், பொறி, கரணங்கள் எந்த அளவில் நின்று ஆணவத்தை விலக்குகின்றனவோ அந்த அளவில் உயிரினது வியாபகம் புலனாகும் என்பது உணர்ந்து தெளியப்படும். 7. வைன்வத்தில் ஆன்மாவை அணுத் தன்மையுடையதாகச் செய்வது கர்மமே. ஆனால் அங்குக் கர்மம் அழியக் கூடியது. இங்கு "ஆணவம் அழியக் கூடியதல்ல; அடங்கக் கூடியது.