பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள். 3 (பாசம்) - 189 மண்ணும் பானையும் என்ற எடுத்துக்காட்டில் காரணப் பொருளாகிய மண்ணும் காரியப் பொருளாகிய பானையும் வேறு வேறு பெயர்பெற்று நிற்பதால் அவை இரண்டு காரண மும் காரியமும் ஆதல் பொருந்தும். கன்மத்தில் அவ்வாறு வேறுபடுத்திக் காட்டும் சொற்கள் இன்மையால் குழப்பம் நேரிடுகின்றது. துலப்பொருளாகிய காட்சிப் பொருள் உள்ள வாறே சூக்குமப் பொருளாகிய கருத்துப் பொருளும் இருத்தல் வேண்டும். வினை சூக்குமப் பொருள், அதன் காரண காரிய நிலைகளில் பெரிய வேற்றுமை இல்லை; அதனால் காரண நிலையைக் குறிக்க மூலகன்மம் என்று அடைமொழி கொடுத்துக் கூறி அமைகின்றனர் என்பது அறிந்து தெளியப் படும். - ----- விளக்கம்: இக்கருத்து இரண்டு முறைகளில் விளக்கம் பெறுகின்றது. (1) காட்சியளவை மட்டிலும் பிரமாணம் அன்று என்பதையும் கருதலளவையும் பிரமாணம்தான் என்பதையும் நாம் அறிவோம். தோன்றி நின்று அழிவன யாவும் காரியமே என்பதும் நமக்குத் தெரியும். “வினையை ஒருவன் செய்யுங் காலத்து அது தோன்றுகிறது; பின் காலம் வருந்துணையும் காத்திருக்கின்றது; காலம் வந்தவுடன் தன் பயனைத் தன்னைச் செய்தவனுக்குத் தந்து விட்டு ஒழிகின்றது" - இந்த உண்மை எல்லோருக்கும் உடன்பாடே. எனவே, தோற்றம், நிலைபேறு, இறுதி என்ற மூன்றையும் உடைமையால் இங்குக் குறிப்பிட்ட இவ்வினை காரியமே என்பது தெளிவு காரியங்கள் யாவும் தமக்குக் காரணங்களை உடையன என்பதும் தெளிவே. இதனால் இக்காரிய கன்மமும் தனக்குக் காரணத்தை உடை யது என்பதும், அக்காரண கன்மமே மூல-கன்மம் என்பதும் கருதலளவையால் இனிது உணர்ந்து கொள்ளலாம். (2) அநுபவத்தாலும் இதனை விளக்கலாம். வினை என்பது பொருள்களின் புடைப்பெயர்ச்சி (Displacement);