பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்-3 (பாசம்) 199 என்று பல்வேறு வகையாகக் காணப்பெறுவதையே சிறப்பாகக் குறிக்கின்றது. இந்த வகையில் ஒவ்வோர் இனத்திலும் புல் பிரிவுகள் காணப்பெறுகின்றன. இவையெல்லாம் வினையி னால் ஆவனவே என்பதை ஈண்டு உளங்கொள்ளலாம். (ஆ) ஆயு: ஆயு என்பது ஆயுள் வாழ்நாளைக் குறிப்பது. நீண்ட வாழ்நாள், குறுகிய வாழ்நாள் என்பனவும் வினையின் பயனேயாகும். (இ) போகம்: போகம்’ என்பது ஒவ்வோர் உயிரும் அநுபவிக்கும் இன்பதுன்பங்களாகும். வினை செயற்படுங்கால் இவை எல்லாம் நடைபெறும் என்பது அறியப்படும். வாழ்க்கை யில் எத்தனையோ இன்பதுன்ப நிகழ்ச்சிகளைச் சந்திக்க நேரிடலாம். அவற்றையெல்லாம் சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவப் பெருமானின் அறவுரையும் ஒருவகையில் இதுபற்றி எழுந் ததேயாகும். . பிராரத்த கன்மம் பயன்தரும் முறை பிராரத்த கன்மம் பயன்தருங்கால் தான் நேரே நின்று தாராது; எவையேனும் சிலவற்றை வாயிலாகக் கொண்டே தரும். அவ்வாயில்கள் பற்றிப் பிராரத்தம் 'ஆதியான்மிகம். ஆதி பெளதிகம், ஆதிதைவிகம் என்று மூன்றாகப் பேசப்படும் சித்தாந்த வித்தகர்களால். இவற்றுள் தன்னாலேனும் பிற உயிர்களாலே னும் வருவன ஆதியான்மிகம். எ-டு. மிதிவண்டி, அது போன்ற ஊர்திகளிலிருந்து வீழ்தல், குளியலறையில் வழுக்கி வீழ்தல் போன்றவை தன்னால் வருவன அரவு தீண்டுதல் மாடு முட்டுதல், நாய் கடித்தல் போன்றவை பிற உயிர்களால் வருபவை. அடுத்து, நிலநடுக்கம், பெருமழை, பெருவெள்ளம், பெருவறட்சி, இடி வீழ்தல், தீமிகுதல், சூறாவளி அடித்தல் 44. குறள்-521 (இடுக்கண் அழியாமை)