பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 2 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (8) திருவருட்பயன் இந்த நூல் சித்தாந்தப் பொருள் களை அடைவுபடத் தொகுத்துக் குறள் வெண்பாக்களால் கூறுகின்றது. 10 குறள்கள் வீதம் 10 இயல்களில் 100 குறள் வெண்பாக்கள் அடங்கியுள்ளன. தொடக்கத்தில் காப்பாக முதற்கண் தனிக் குறள் வெண்பா உள்ளது. உலகியல் திருக் குறள், வீட்டினை அறத்துப் பாலில் அடக்கிக் கூறுகின்றது. இந்நூலில் வீடு பற்றிய கருத்து தனியாக எடுத்துக் கூறப்பெறு கின்றது. இதனால் இதனை மெய்ந்நெறித் திருக்குறளாகக் கொண்டு ஓதி உணர்ந்து வீடாகிய முடிந்த பயனைப் பெற வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருத்தல் வேண்டும். சைவப் பெருமக்கள் இதனை உண்மை விளக்கத் திற்கு அடுத்ததாகக் கற்று அதன் பிறகு சிவப்பிரகாசத்தைக் கற்றலை ஒரு மரபாகக் கொண்டுள்ளனர். (9) வினாவெண்பா: இந்நூல் இருபா இருபஃது போன்றது. அஃதாவது, இதன் ஆசிரியர் தம் ஆசிரியராகிய மறைஞானசம்பந்தரிடம் வினவி அறிந்த நுண் பொருள்களை வினா வடிவிலேயே உணர்த்துகின்றார். இந்நூல் 13 வெண்பாக் களால் நடைபெறுகின்றது. (10) போற்றிப் பஃறொடை வெண்பா. இறைவன் உயிர் கட்குத் தன் பெருங்கருணையால் கைம்மாறு கருதாத பேருத வியைச் செய்து வருகின்றான். இதனைத் தத்துவ நெறியால் உணர்ந்து அவனைப் போற்றி உரைப்பதாகச் செய்யப் பெற்றது இந்நூல். ஆகவே இதில் பல தத்துவக் கருத்துகள் தாமாகவே அமைந்து விளங்குவனவாயின. இது 95 கண்ணி களையுடைய கலிவெண்பாவால் அமைந்தது. (11) கொடிக்கவி: இந்நூல் ஐந்து திருப்பாடல்களால் ஆனது. இதன் ஆசிரியர் உமாபதி சிவம் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.