பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 293 பெறும் முனிவர்கள் வானப்பிரத்தம்' என்ற மூன்றாம் நிலையில் நின்றவர்களேயன்றி முற்றத் துறந்த சந்நியாசம் என்ற நான்காம் நிலையில் நின்றவர்கள் அல்லர். இவர்கள் யாவரும் தவசிகள் எனப் பெயர் பெறுவர்களேயன்றி யோகியர் எனப்பெயர் பெறார் எனப் பிரித்து அறிதல் வேண்டும். நியமம் என்பது நூல்களில் விதித்தவற்றை இயன்ற அளவில் கடைப்பிடித்தல் ஆகும். நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடிஇச் சோர்தடை தாழச் சுடரோம்பி-ஊரடையார் கானகத்தே கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி.” என்ற வெண்பாவில் குறிப்பிட்டுள்ளவை இந்நியமத்துள் சேர்வனவாகும். இனி, ஆசனம் என்பது தாமரை (பதுமம்), யாமை (கூர்மம்), முதலிய பெயர்களைப் பெற்றுள்ள இருக்கை வகைகளில் உடலைப் பயிற்றி அவற்றின்படி அமர்தல். பிராணாயாமம் என்பது, இயற்கையாக இயங்கும் மூச்சுக் காற்றினைத் தன் வசப்படுத்தி ஒரு நெறியில் இயங்கச் செய்தல். பிரத்தியாகாரம் என்பது, தான் நினைத்த பொருளின் வடிவாதல். தாரணை என்பது, மனத்தை அடக்கி ஒருவழியில் நிறுத்துதல். இறைவனுடைய திருமேனியை மனத்தில் கொள்ளுதலுமாம். தியானம் என்பது, இறைவனை அவனது அருளுருவத் திருமேனியாகிய ஒளி வடிவினனாக எண்ணு தல். சமாதி என்பது, அந்த எண்ணத்தில் தன்னை மறந்து அவனோடு ஒன்றிவிடுதலாகும். மனம் தாரணைக்கண் நின்ற பின்னர்ச் சிவபெருமானைத் தியானித்தலும், அவனிடத்து 33. புறம். வெண். மாலை-வாகைப்-14