பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் (ஈ) பாகுபாடுகள் இக்கூறிய மூவகைக் கருமங்களை யும் இயற்றுவோரும் அவரவர் ஆற்றலுக்கு ஏற்றவாறு பாகுபாடு செய்யப்பெறுகின்றனர். நித்திய கருமத்தோடு நைமித்திக காமிய கருமங்களை யும் கடமையாக இயற்றும் ஆற்றலுடையவர் மக்களுள், 'உத்தமர் என்று வழங்கப் பெறுவர். அவ்வாற்றலின்றி நித்திய கருமம் மட்டிலுமே செய்ய வல்லவர் மத்திமர் எனப்படுவர் அதுவும் செய்ய மாட்டாதார் 'அதமர் என்று கூறப்பெறுவர். இதில் முதல் இருவருமே அங்கி தீக்கைக்கு உரியவர்கள். அதமர் எவ்வகையிலும் அங்கி தீக்கைக்கு உரியவராகார். அங்கதீக்கையே இவர்கட்கு உரியது. இங்ங்னம் ஆற்றலும் ஆற்றலற்ற நிலைகளுமே வருணங்கள் ஏற்படும் சூழ்நிலைகள் என்று கருதலாம். மேற்குறிப்பிட்ட உத்தமருள் வேதசிவாகமங்களை நன்றாக ஓதி உணர்ந்து அவற்றில் நுவலப்பெற்ற ஒழுக்கங் களை முற்றக் கடைப்பிடித்து ஒழுகவல்லவர்கள் உத்தமருள் உத்தமர் ஆவர். வேத சிவாகமங்களை ஓதி உணர்ந்தும் அவற்றில் கூறப்பெற்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க மாட் டாதவர் உத்தமருள் மததிமர் ஆவர். வேதசிவாகமங்களை ஓதி உணரவும், அவற்றில் நுவலப்பெற்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் மாட்டாமல் நித்திய நைமித்திக காமிய கருமங்களை மட்டிலும் செய்வோர் 'உத்தமருள் அதமர் என்று வழங்கப்பெறுவர். இம்மூவரும் சாதிகாரதீக்கைக்கு உரியவர்களாவர். இவர்கள் அபிடேகதீக்கை பெற்றவராயின் ஆசாரியரும் சாதகருமான நிலைகளை அடைவர். (உ) மந்திரங்கள். தீக்கையில் உபதேசிக்கப்பெறும் மந்திரங்கள் பலவற்றுள் பஞ்சாக்கரம் (சிவாய நம: என்பது)