பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும் தனிமு டிக்கவித் தாளும் அரசினும் இனிய்ன் தன்னடைந்தார்க்கிடை மருதனே.” என்ற திருப்பாடலில் திருவிடை மருதூர் இறைவனை இனியனாகக் காட்டித் தம் அநுபவத்தைப் பெற வைப்பர். இன்னோர் உண்மை. உடம்புபற்றி வரும் பசி முதலி யவை காரணமாக அவர்களது அறிவு புறத்தே வருதல் எவையேனும் சில நேரமேயன்றிப் பிறர்போல் எப்பொழுதும் அன்று என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இந்நிலையில் அவர்கள் நல்ல சுவையான உணவுகளையும் பாங்கான உறை விடங்களையும் தேடிச் செல்லார். மாறாக இயல்பாகக் கிடைக் கும் காய், கனி, கிழங்கு, சருகு, நீர், காற்று முதலியவற்றையே உண்டு பொதுவிடங்களிலும், புறத்திண்ணைகளிலும் மரநிழல் களிலுமே தங்குவர். . - அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி யுடன்கிடந்தார் புரட்டாள்.' என்ற அப்பர் பெருமானின் தாண்டகத்தால் இவர்கள் நிலையை அறியலாம். - - அன்பும் அறனும் உடைய பிறரால் கொடுக்கப்பெறின் 'சிவனருள் என்று மறுக்காமல் கொள்வர். 'சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்” என்பதில் சிறிதும் வழுவாதவன் இறைவன் அன்றோ? ஆதலின், அவன் இச்சீரடியார்க்கு வேண்டத் தக்கதை அறிந்து வேண்டும் பொழுது கிடைக்கு மாறு செய்து நிற்பான். மணிவாசகப் பெருமானின், - ேெதுெ 5.1410 39. அப். தே.6.98:2