வீடு பேறு 341 வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் - யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே." என்ற மணிவாக்கால் இதனை யறியலாம். ஆயினும், இந்த அடியார்கள் இறைவன் கொடுப்பான்” என்று எதிர் நோக்குதலும் இல்லை. ஆயினும், அவன் தானே முன்வந்து இவர்கட்கு அவற்றைக் கிடைக்கச்செய்வான். அப்பர், சுந்தரர் இவர்கட்கு இறைவன் கட்டமுதுகொணர்ந்து கொடுத்ததும், சுந்தரர்க்கு இரந்து வந்து சோறிட்டதும், ஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு முத்துக்குடை முதலியவற் றைத் தானே கொடுத்ததும், திருவிழிமிழலையில் சம்பந்தர் நாவுக்கரசர் இருவருக்கும் நாள்தோறும் படிக்காசு அருளியது மான நிகழ்ச்சிகள் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. இங்ங்னம் இவர்கள் கவலையற்றிருப்பதால் இவர்களது செயல் சிலசமயம் இளஞ்சிறார்களது செயல் போலவும், பித்துக் கொண்டவர் செயல்போலவும் களிப்பு மிகுதியால் ஆடுதல், பாடுதல் முதலியனவாகவும் நிகழலாம். - உலகில் இவர்கட்கு எவ்விதப் பற்றும் இல்லாமையால் உலகியல் பற்றிய விருப்போ வெறுப்போ இவர்களிடம் தலை காட்டாது. உடம்புபற்றிய அச்சமும் இவர்கட்கு இல்லை. அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை." 40. திருவா. குழைத்த பத்து-6 41. அப்பர்தேவாரம்4.2 பத்துப்பாடல்களிலும் இறுதியாக வருவது.
பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/356
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை