பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 397 ஆடையாகின்றது; அவனை மூடுவதற்கு இதைத் தவிர வேறொன்றும் இல்லை. மோப்பம் அல்லது கிராண சக்தி வாசனைத் திரவியமாக அளிக்கப் பெறுகின்றது. உடல் முழுவதும் வியாபித்திருக்கும் பிராணன் தூபமாகக் கொடுக்கப் படுகின்றது. அதன் பிறகு தீபம் காட்டப் பெறுதல் வேண்டும். சாதகனுடைய நல்லறிவே மானச பூசையில் தீபமாகக் கருதப் பெறுகின்றது. சுடர் விட்டெரியும் தீபமாகத் தனது புத்தி அல்லது நல்லறிவைத் தனது மனத்தகத்துக் கோயில் கொண்டிருக்கும் பரஞ்சோதியின் முன் வைக்கின்றான். சீவகோடி அனைவர்க்கும் உலக வாழ்க்கையில் பெரும் பற்று இருப்பதை நாம் அறிவோம். இந்த வாழ்க்கைப்பற்றை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து விடுகின்றான் பக்தன். அனாகத் தொனி எனப்படும் தொனி ஒன்று இயற்கையில் உண்டு. அஃது ஓங்கார வடிவமாக ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும். நம் சிற்றுடல் வாழ்க்கை முழுதும் ஒழுங்காகும்போது இத்தொனியை நம்முள் கேட்கலாம். மானச பூசையில் இத்தொனி மணியாக அமைந்து விடுகின்றது. அர்ச்சனைக்கு மலர்கள் வேண்டுமல்லவா? அகிம்சை, சத்தியம், விவேகம், வைராக்கியம், சாந்தி, பணிவு, அன்பு, அமைதி, தீரம், வீரம் முதலியவற்றை ஆழ்ந்து சிந்தித்து ஒன்றன்பின் ஒன்றாகச் சாத்துவது மலர் அஞ்சலியாகின்றது. பாவனை அல்லது மனக்கண்ணால் உணர்தல் வலிவும் தெளிவும் பெறுதற்கேற்ப மானச பூசையும் அவற்றிற்கேற்ப முழு நிறைவு பெறுகின்றது. பூசையின் ஒவ்வொரு பகுதியையும் ஆழ்ந்து பாவித்துக் கொண்டே போனால் பரிபூரண பிரம்மானந்த அநுபவம் என்பதைத் தெளிவாக உணரலாம். - (i) பாகிய பூசை வழிபாடுகளுள் மானச பூசையே மேலானது. அப்பர். ஞான சம்பந்தர், நம்மாழ்வார் போன்ற