பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சயம் பண்ணுதல்

சற்காரிய வாதம்


சயம் பண்ணுதல் - தேய்த்தலைச் செய்தல்.
சயம் உறு- வலி பொருந்திய.
சயனம் - உறக்கம்.
சயித்திரம் - சித்திரை மாதம்.
சரசுவதி- 1)நாமகள் கலைத் தெய்வம். 2) 9 தீர்த்தங்களில் ஒன்று.
சரடு - முறுக்கு நூல். எ-டு தடமணி சரடு.
சரணம் - அடிதொழில்.
சரயு - 9 தீர்த்தங்களில் ஒன்று.
சராயு - கருப்பை.
சராயுசம் - கருப்பையில் தோன்றுவது; மனிதன்.
சர்வேதர்ம - எல்லாக் குணங்களையும் உடையது. அஃதாவது சார்ந்ததன் தன்மையாய் நிற்றல்.
சர்வோக்தம்- 28 ஆகமங்களுள் ஒன்று.
சரியை- ஒழுக்கம். நாற்படிகளில் ஒன்று. இறைவனுக்காகச் செய்யப்படும் :செயல். சிவாலயங்களில் சென்று திருவலகிடுதல், திருமெழுகிடுதல், பூந்தோட்டம் அமைத்தல், பூப்பறித்து மாலை தொடுத்துக் கொடுத்தல், உருவத் திருமேனிகளாகிய மூர்த்தங்களில் ஒன்றை நியமமாக வழிபடுதல்.
சரியை வகை - 1)சரியையில் சரியை; திருக்கோவிலில் அலகிடல், மெழுகுதல். 2)சரியையில் கிரியை பரிவார மூர்த்திகளில் ஒரு மூர்த்தியை வழிபடுதல். 3)சரியையில் யோகம்: நெஞ்சில் சிவபெருமான் உருவத்திருமேனியைத் தியானஞ் செய்தல். 4) கிரியையில் ஞானம்; அத்தியான பாவனையின் உறைப்பினால் ஒரு பட்டறிவு உணர்வு உண்டாதல்.
சரீரம் - உடல் மூவகை பூதனா சரீரம் பருஉடல், புரியட்ட சரீரம் - நுண் உடல் யாதனா சரீரம்- வேற்று உடல்.ஒ.சாரீரம்
சரீர சரீரி பாவம் - உடலும் உடலும் உடைய தன்மை.
சருவஞ்ஞன்- முற்றுணர்வினன்.
சருவ வியாபி - எங்கும் நிறைந்தவன்; இறைவன்.
சலந்தரன் - சிவனால் மடிந்த அசுரன்.
சலந்தரவத மூர்த்தி- சலந்தரனை வதைக்க எடுத்த

சிவமூர்த்தியின் வடிவம்.

சலம்-தத்துவ அசைவு.நீர் துயர், நடுக்கம், வஞ்சனை, எ-டு சாம் பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல் (திப 39)
சலமிலன்-விருப்பு வெறுப்பற்ற இறைவன்.
சலனம்- சஞ்சலம், இயக்கம் எடு 1) இனிச் சலனப்பட்டுப் பயனில்லை 2) இக்கதையில் சலனம் குறைவு.
சலித்தல் - சோர்வு.
சலியாது நிலைபெறுதல்-அசையாது நிற்றல்.
சவடி - காதணி அணிவகையில் ஒன்று. எ-டு சூடகம் கடகம் மோதிரம்சவடி (சிசிபப 258)
சவம்- பிணம்.எடுசவ ஊர்வலம்.
சவிகற்பம் - சிறப்பு வேறுபாட்டுடன் கூடியது. ஒரு பொருளைத் திட்டவட்டமாக உணர்வது ஒ. நிருவிகற்பம்.
சற்காரியம் - சத்காரியம். சத் உள்ளது. காரியம்- பொருள். உள்பொருள்.

சற்காரிய வாதம் - உள்ளது தோன்றும் இல்லது தோன்றாது என்

108