பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்செழுத்து வகை

7

அட்ட வீரட்ட தலங்கள்




கொண்டு எழுந்தருளி ஐயன் ஆடியருளுவான். இந்த ஆடலை விரும்பிப் பார்ப்பவர்க்கு மறுபிறவி இல்லை.(39)

அஞ்செழுத்துவகை - செவிக்குப் புலப்படும் வகையில் இது ஐந்து வகை. 1. பருமை - நமசிவாய 2. நுண்மை - சிவயநம 3. காரணம்-சிவயவசி 4. மாக்காரணம் - சிவசிவ 5. மாமந்திரம் - சி

அடங்கி - ஒடுங்கி

அடங்குதல் - உள்ளமைதல்

அட்சதை - மங்கல அரிசி

அட்சமணி - உருத்திராக்கமாலை

அட்டஇலக்குமி-தன இலக்குமி, தானிய இலக்குமி, தைரிய இலக்குமி, வீர இலக்குமி, வித்யா இலக்குமி, கீர்த்தி இலக்குமி, விசய இலக்குமி, இராச இலக்குமி என எட்டு.

அட்ட கணபதி - அதிகணபதி, மாகணபதி, நடன கணபதி, சத்தி கணபதி, வாலை கணபதி,உச்சிட்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி என எட்டு.

அட்ட கர்மம் - எண் வினை; ஆகருடணம், உச்சாடனம், தம்பனம், பேதனம், மாரணம், மோகனம், வத்து வேடணம், வசியம்.

அட்ட குணமுத்தி - என் குண வீடுபேறு. எட்டுத்தீய குணங் களை நீக்கி, எட்டு நல்ல குணங்களைக் கொள்ளுதல்.பா.முத்தி

அட்ட பந்தனம் - சுக்கான்கல்,கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நாற்காவி ஆகிய எட்டுப் பொருள்களின் கூட்டு, சில விக்ரகங்கள் அசைவன்றி இருக்கச் சாத்தப்படுவது எ-டு அட்டபந்தன கும்பாபிடேகம்

அட்டபுட்பம்-எட்டுப்பூக்கள். அவையாவன: கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.

அட்டமா சித்திகள் - எட்டுச் சித்திகள்: அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்துவம், ஈசத்துவம். அட்ட மூர்த்தம் - சிவன் வடிவம் எட்டு: புவி, நீர், தேயு, ஆகாயம், தீ, கதிரவன், திங்கள், ஆன்மா.

அட்டவசுக்கள்- எட்டுத் தேவர்கள். அனலன், அனிலன், ஆபன்,சோமன்,தரன்,துருவன், பிரத்தியூடன், பிரபாசன்.

அட்ட வித்தியேசுரர் - ஈசுர தத்துவம், சுத்த தத்துவத்தில் ஒன்று. இதிலுள்ள எட்டு ஈசுரர்களாவன: அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி

அட்ட வீரட்ட தலங்கள் 1.திருக்கண்டியூர்-பிரமன் தலை கொய்தது. 2.திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது 3.திருஅதிகை - திரிபுரத்தை எரித்தது. 4 திருப்பறியலூர் - தக்கன் தலைகொய்தது 5.திருவிற்குடி- சலந்தராசுரனைக் கொன்றது 6.வழுவூர்(வைப்புத் தலம்)-யானையை உரித்தது. 7.திருக்குறுக்கை-காமனை எரித்தது 8. திருக்கடவூர்-எமனைஉதைத்தது.


7