பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவு... அற்புதங்கள்

திருமந்திரம்



மேகன் என் சொல்லி' முத்தியடைந்த அகவை 81. கி.பி. 7. சமயக்குரவர் மூவரில் ஒருவர்.

திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள் - 1) சமணர்களால் 7 நாள் சுண்ணாம்பு அறையில் பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது. 2) சமணர்கொடுத்த நஞ்சு கலந்த பால் சோற்ன்ற உண்டும் சாகாது பிழைத்தது. 3) சமணர் விடுத்த கொலை யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது. 4) சமணர் கல்லில் சேர்த்துக் கட்டிக் கடலில் இடவும் அக்கல்லே தோணியாகக் கொண்டு கரை யேறியது. 6)திருமறைக் காட்டில் திருக்கதவு திறக்கப் பாடியது. 7) நஞ்சினால் இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்தது 8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தினுள் மூழ்கித் திருவையாற்றிலே வாவியின் மேலே தோன்றிக் கரையேறி யாதும் சுவடுபடாமல் ஐயாற்றரசின் கண்டறியாததிருப்பாதத்தைக் கண்டது.


திருநாளைப் போவார் நாயனார் - ஆதித் திராவிடர். ஆதனூர் -சோழ நாடு சிதம்பரத்திற்கு நாளைப் போவேன் நாளைப் போவேன் என்று உரைத்தவர். திருப்புன்கூரில்திருக்குளம் அமைத்தவர். இலிங்க வழிபாடு (63).


திரு நீண்ட யாழ்ப்பாண நாயனார் - பாணர் திருஎருக்கம் புலியூர் நடுநாடு. மதுரையில் யாழ் இசைத்து ஆலவாயனிடம் பொற்பலகை பெற்றவர். திருஞான சம்பந்தரோடு தலம் தோறும் சென்று சம்பந்தரது தேவாரப் பதிகங்களை யாழி லிட்டு வாசித்து வந்தார். குரு வழிபாடு (63).


திருநீலகண்டநாயனார் - குயவர். சிதம்பரம் - சோழநாடு. சிவனடியார்க்குத் திருவோடு அளித்து வந்தவர். சங்க வழிபாடு (63).


திருநீலநக்கநாயனார் - மறையவர். சாத்த மங்கை - சோழ நாடு. குருட்டுச் சிவபத்தர். இலிங்க வழிபாடு (63).


திருநீறு - விபூதி, சிவசாதனங்களில் ஒன்று.


திருநெறித் தமிழ் - தேவாரம்


திருப்படிமாற்று - இறைவனுக்குப் படைக்கும் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய கட்டளைப் பொருள்கள். எ-டு செய்யில் உகுத்த திருப்படி மாற்று (திப 20).


திருப்பதிகம் - தேவாரம் போல் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடல் தொகை.


திருப்பள்ளியறை - கோயில் மூர்த்தி இரவில் பள்ளிக்கு எழுந்தருளும் அறை.


திருப்பாட்டு - கடவுள் பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம்.


திருப்பாவாடை - ஆடைமேல் கோயில் மூர்த்திக்குப் படைக் கப்படும் பெரிய நிவேதனம்.


திருமஞ்சனம் - திரு முழுக்கிற்குரிய நீர்.


திருமஞ்சனக் கவி - கோயில் மூர்த்திகளின் திரு முழுக்கின் பொழுது சொல்லும் பாடல்.


திருமடந்தை - புகழ் மகள்.


திருமடைப் பள்ளி - கோயில் சமயலறை.


திருமதலை - முருகன். பா.மதலை


திருமந்திரம் - திருமூலர் செய்தருளியது. 3000மந்திரங்களைக் கொண்டது. சிறந்த ஞான நூல்

152